tamilnadu

நோய் எதிர்ப்பு சக்தி 87 விழுக்காடு அதிகரிப்பு: ஆய்வில் தகவல்

சென்னை, பிப்.9- கொரோனா நோய் பரவல் அச்சுறுத்தி வருகிறது. நோய் தொற்றில் இருந்து பாது காக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக்  கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகின்றது. அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக தடுப்பூசி செலுத் திக் கொண்டவர்க ளின் எண்ணிக்கை அதிகரித் துள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. இந்த நிலையில் பொதுமக்களின் நோய்  எதிர்ப்பு சக்தி குறித்து ரத்தம் சார்ந்த தொற்று நோயியல் ஆய்வு செய்யப்பட்டு வரு கிறது. முதல் கட்டமாக கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் செய்யப்பட்ட ஆய்வில் பொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தி 32 விழுக்காடாகவும், 2-வது கட்ட மாக 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப் பட்ட ஆய்வில் நோய் எதிர்ப்பு சக்தி 29 விழுக்காடாகவும் 3-வது கட்டமாக 2021 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் நோய் எதிர்ப்பு சக்தி 70 விழுக் காடாகவும் இருந்தது.

தற்போது 4-வது கட்டமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் பொதுமக்களின் நோய் எதிர்ப்பு 87 விழுக்காடாக அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு 32,245 பேரிடம் தலா 30 பேர் கொண்ட 1,076 குழுக்களாக பிரிந்து கிராமம், நகர்ப்புற பகுதிகளில் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மாநில பொது சுகாதார ஆய்வகங்களில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி 87 விழுக்காடாக உள்ளது. 11 முதல் 18 வயதுக்குட்பட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி 68 விழுக்காடு இருக்கிறது. ஆனால், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 27,324 பேரில் நோய் எதிர்ப்பு சக்தி 24,667 பேரிடம் (90 விழுக்காடா கும்) இருந்தது. தடுப்பூசி செலுத்தி கொள்ளாத 4,921 பேரில் 3,374 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக (69 விழுக் காடு) இருந்தது.மாவட்டம் வாரி யாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் திருவாரூர் மாவட்டத்தில் 93 விழுக் காட்டினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. சென்னையில் 88 விழுக்காட்டினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது.