சென்னை, பிப்.6- திண்டுக்கல் மாவட்டத் தைச் சேர்ந்தவர் சுபேதார் எஸ்.இருதயசாமி (81). இந்திய ராணுவத்தில் 18 வயதில் சேர்ந்தார். சீன-இந்தியா போர் (1962), இந்தியா-பாகிஸ்தான் போர்களில் (1965) பங்கேற்ற இருதயசாமி, 1971-ல் வங்கதேச விடுதலைக்காக நடை பெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரின் போது ஹவில்தாராகப் பங்கேற்றார். ராணுவத்தில் 32 ஆண்டுகள் சேவைபுரிந்த கேப்டன் இருதயசாமி, 1992 இல் ஓய்வு பெற்றார். பின்னர், திருச்சியில் தான் குடியிருந்த பகுதி மக்களின் மேம்பாட்டுக்காக 1996இல் ரங்கநாதன் குடியிருப் போர் நலச் சங்கத்தை தொடங்கி னார். சங்கத்தின் தலைவராக சுமார் 18 ஆண்டுகள் பொறுப்பு வகித்த அவர், அப்பகுதியின் அத்தியாவசிய வசதிகளை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
தேசிய போட்டியில் வெற்றி சிறு வயது முதல் விளையாட்டில் ஈடுபாடு கொண்ட இருதயசாமி, 2014 முதல் முதியோர்களுக்கான தடகளப் போட்டிகளில் பங்கேற்றார். 2020-ல் தேசிய அளவில் மணிப்பூரில் நடை பெற்ற முதியோர் தடகளப் போட்டி யில் வெற்றிபெற்றார். மேலும், சர்வதேச அளவில் நடைபெறும் முதியோர் தடகளப் போட்டியிலும் பங்கேற்க முயற்சித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபரில் தென்பிராந்திய ராணுவ அதிகாரி லெப். ஜெனரல் ஏ.அருணுக்கு அனுப்பிய கடிதத்தில், தனது வங்கி சேமிப்புக் கணக்கில் உள்ள ரூ.10 லட்சத்தை ராணுவத் துக்கு நன்கொடையாக அளிப்பதாக வும், தானும், தனதுமனைவியும் மறைந்த பின்னர், தங்களது வீடு மற்றும் சொத்துகளை இந்திய ராணுவத்துக்கே கொடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக இருதயசாமி கூறியதாவது:- இந்திய ராணுவம் எனக்கு செய்த உதவிக்கு, திருப்பிச் செலுத்தும் நன்றிக் கடனாகவே இதைப் பார்க்கி றேன். எங்களுக்கு குழந்தைகள் கிடையாது. எனவே,எனது சொத்து களை இந்திய ராணுவத்துக்கு வழங்க முடிவு செய்துள்ளேன். மேலும், எனது சேமிப்புத் தொகையை ஓய்வு பெற்ற ராணுவ வீரர் குழந்தைகளின் கல்விக்கும், முதியோர் நலனுக்கும் பயன்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளேன். இந்த முடிவை நானும், என் மனைவியும் சேர்ந்து தான் எடுத்தோம். இவ்வாறு அவர் கூறினார்.