tamilnadu

img

புளியங்குடி எலுமிச்சையும்... தொடுபுழா இளைஞர்களும்...

தொடுபுழா, ஜன.30- “இங்கே வா, எலுமிச்சை பழம் சாறு  தயாராக உள்ளது. குடித்துட்டு போக லாம்...” எலுமிச்சை பழம் சாறு கலக்கு வதில் மும்முரமாக இருந்தபோதும் ஷாஜியும் உன்னியும் சிரித்த முகத்து டன் அழைத்தார்கள். அவர்களுடன் பேச ஒரு கணம் மட்டுமே கிடைக்கும். எஞ்சிய நேரம் முழுவதும் எலுமிச்சை சாறு தயாரிக்க செலவிடுகிறார்கள்.  இங்கு குறிப்பிடுவது கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா வில் உள்ள சிறப்பு வாய்ந்த எலுமிச்சை  பழச்சாறு கடை பற்றி. தொடுபுழா காஞ்ஞிரமட்டம் சந்திப்பில் இருந்து மகாதேவர் கோயிலுக்கு செல்லும் வழியில் இந்த எலுமிச்சை பழச்சாறு கடை உள்ளது. “இனிப்பும், உப்பும், எரிப்பும் கலந்த  எலுமிச்சைப் பழச்சாறு அனைவருக் கும் பிடிக்கும். எலுமிச்சையை பிழிந்த  பிறகு, அன்னாசி துண்டுகள் சேர்க்கப் படுகின்றன. புதினா இலைகள் மற்றும்  சர்க்கரையுடன் ஒரு நிமிடம் நன்கு கலக்கப்படுகிறது. சிறிது கஸகஸா, நசுக்கப்பட்ட ஜாதிக்காய் சேர்த்து தொடர்ந்து கிளறப்படுகிறது. அப்போ தே சோடாவும் சேர்க்கப்படுகிறது. சர்க்கரை, சோடா, அன்னாசி, புதினா ஆகியவற்றை நன்கு கலந்து கையில் கொடுக்கிறார்கள். இது இனிப்பு தேவைப்படுவோருக்கு. 

உப்பு தேவைப்பட்டால் கந்தாரி மிள காய், இஞ்சி, ஜாதிக்காய் சேர்க்கப்படு கிறது. 13 ஆண்டுகளாக ஷாப்பும்படி யை சேர்ந்த சி.எம்.ஷாஜியும், அவரது நண்பரான முதலியார்மடத்தை சேர்ந்த  உன்னியும், இந்த மீனாட்சி எலுமிச்சை  பழச்சாறு கடையை நடத்தி வரு கின்றனர். தமிழ்நாட்டில் இருந்து வரும் நல்ல ரக புளியங்குடி எலுமிச்சம் பழம்  இதற்கு பயன்படுத்தப்படுகிறது. தொடு புழா சந்தையில் இருந்து தினமும் 25 கிலோ எலுமிச்சை கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு 400-க்கும் மேற்பட்ட எலுமிச்சை பழங்கள் விற்பனையாகின்றன. வெயில் காலத்தில் இதன் தேவை அதிகமாக இருக்கும். எலுமிச்சை பழம் விலை அதிகரித்தாலும், இங்கு எலுமிச்சை பழச்சாறின் விலை உயராது” என்றார் ஷாஜி. ஷாஜியும் உன்னியும் ஐந்து வரு டங்களாக மளிகை வியாபாரம் செய்து விட்டு, தற்போது இப்பணிக்கு வந்துள்ள னர். காலை 8 மணி முதல் கடையில்  எலுமிச்சை பழச்சாறு கிடைக்கும். ஜிம்முக்கு சென்றுவிட்டு தெற்கு  திடலுக்கு வருபவர்கள் காலையி லேயே கடையின் முன் வந்து விடு கின்றனர். விலை 30 ரூபாய். சமூக ஊட கங்களில் எட்டு கோடிக்கும் அதிக மான மக்கள் இவர்களின் கதையைக் கேட்டுள்ளனர். எலுமிச்சை பழச்சாறை குடிக்காமல் தொடுபுழாவுக்கு வருபவர்கள் குறைவு.