சேலம் சிறைத் தியாகிகளின் 72ஆம் ஆண்டு நினைவு தினம் வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகமான சேலம் சிறைத் தியாகிகள் நினைவகத்திலும், சேலம் மத்திய சிறையையொட்டியுள்ள நினைவு ஸ்தூபியிலும் நடைபெற்ற நிகழ்வுகளில் கட்சியின் மாவட்டச் செயலாளர் மேவை. சண்முக ராஜா செங்கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.ராமமூர்த்தி, ஆர்.வெங்கடபதி, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.குழந்தைவேல், சேலம் வடக்கு மாநகர செயலாளர் என்.பிரவின்குமார், பி.சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.