tamilnadu

img

பெரம்பலூர் புத்தகத் திருவிழாவில் ரூ.60 லட்சத்திற்கு புத்தகங்கள் விற்பனை

பெரம்பலூர், ஏப். 4- பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனை யாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தி வரும் பெரம்பலூர் எட்டாவது புத்தகத் திரு விழாவின் 10-ஆவது நாள் நிகழ்வுகள் பெரம்பலூர் நகராட்சித் திடலில் நடைபெற்றது.  நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமை வகித்தார். மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர்  தாரேஸ்அஹமது “தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்ற தலைப்பிலும் கவிச்சுடர் கவிதைப்பித்தன், “பாரதி ஏற்றிய பைந்தமிழ் நெருப்பு” என்ற தலைப்பில் கவிஞர் ஜோ.மல்லூரி, “என் குறிப்பு” என்ற தலைப்பில் பா.தாமோதரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் தாரேஸ்அகமது பேசு கையில்,  உலகத்திலுள்ள 80 நாடு களைச் சேர்ந்த 25 லட்சத்து 48 ஆயிரம் பேர் யூடியுப் மூலம் 25 லட்சத்து 48 ஆயிரம் பேர் பெரம்பலூர் புத்தகத் திருவிழாவை பார்த்ததாக பதிவாகி உள்ளது.  

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னாள் தொடங்கப்பட்ட இந்தப் புத்தகத் திரு விழா சின்னப்பிள்ளைக்கு பொட்டு வைத்து அழகு பார்த்ததை கடந்து இன்று பெரிய பிள்ளையாக வளர்ந்துள் ளது போன்று நல்ல சிந்தனையாளர் களை உருவாக்க எடுத்த முயற்சி யில் மாவட்ட நிர்வாகம் பெரம்பலூர்  மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து அன்று முதல் இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பெற்றோர்களுக்கு புத்தகம் படிக்கும்  பழக்கம் இருந்தால் குழந்தைகளும் அந்தப் பழக்கத்தை மேற்கொள் வார்கள் என்றார். புத்தகத் திருவிழாவை பத்து நாட் களில் 70,000 பேர் பார்வையிட்டுள் ளார்கள். ரூ.60 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.