tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

6.5 லட்சம் விவிபேட் (VVPAT) இயந்திரங்கள் பழுதடைந்துள்ள விவ காரத்தில் தேர்தல் ஆணையம் மக்களின் நம்பிக்கையை மீட்டெ டுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கேரா வலியுறுத்தி யுள்ளார்.

2017-21 ஆண்டு கால கட்டங்களில் அரசு தன்னிடம் உள்ள தரவுகளை ஏற்காமல் இல வச லேப்டாப், காலணி கள், பள்ளி பைகள் வழங்கும் திட்டத்தை கவ னக்குறைவாக செயல் படுத்தியதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாண வர்களுக்கு இந்த பொருட் கள் வழங்குவதில் தாமதம், வீண் செலவுகள், தேவையற்ற நிதி முடக்கம் ஏற்பட்டுள்ளன. முக்கியமாக அதிமுக ஆட்சியில் அரசுக்கு ரூ. 68.51 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

இடதுசாரி ஆட்சி நடை பெறும் தென் அமெரிக்க நாடான சிலியின் பொரு ளாதாரத்தை உயர்த்த வும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் நாட் டில் உள்ள அனைத்து லித்தியம் சார்ந்த தொழில் நிலப்பரப்புகளை தேசிய மயமாக்கப் போவதாக சிலி ஜனாதிபதி கேப்ரி யல் போரிக் அறிவித்துள் ளார். லித்திய உற்பத்தி யில் உலகின் இரண்டா வது பெரிய உற்பத்தியாள ராக சிலி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மிரட்டி பணம் பறித்த வழக்கில் ஜலாலாபாத் ஆம் ஆத்மி எம்எல்ஏ ஜக் தீப் கோல்டியின் தந்தை சுரிந்தர் காம்போஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் நாளுக்குநாள் அனைத்து பகுதிகளிலும் அதிகரித்து வருகிறது. ஒன்றிய அரசின் கூற்றுக்கு மாறாக, சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு-காஷ்மீரில் பயங்கர வாதம் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்துள்ளன என காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக்விஜய சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஒக்லாஹோமா மாகாணத்தில் ஏற்பட்ட சூறாவளியால் ஏராளமான மரங்கள் முறிந் தன. மேலும் வீடுகள், கட்டடங்கள் தரைமட்டமாகின. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால், ஒக்லா ஹோமா மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் உள்ள சாதனா கணவாயில் பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அங்கு சிக்கிய 300-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை காவல்துறையினர், உள்ளூர் மக்கள் போராடி மீட்டனர். 

 

உலகச் செய்திகள்

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க உலக அளவிலான கூட்டு நடவடிக்கைகள் தேவை என்று  ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டெரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்துப் பேசிய  அவர், “ஒத்துழைப்பு மூலமாக உலக அளவில் இதை விரைவு படுத்த வேண்டும். நமது வேறுபாடுகள், சச்சரவுகள் உள்ளிட்ட வற்றைத் தாண்டி நாம் செயல்பட வேண்டிய அவசியம் இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

ஏப்ரல் 30 ஆம் தேதியன்று தென் அமெரிக்க நாடான பராகு வேயில் பொதுத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. 40 லட்சம் வாக்காளர்கள் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோரைத் தேர்வு செய்வார்கள். தேர்வு செய்யப்படுபவர்கள் 2023 முதல் 2029 ஆம் ஆண்டு வரையில் பொறுப்பு வகிப்பார்கள்.  வலதுசாரி வேட்பாளர்களுக்கு, இடதுசாரி வேட்பாளரான அலிக்ரே கடுமையான போட்டியைத் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“எங்கள் குமுறல்களை எல்லாம் கேட்காமல் காதைப் பொத்திக் கொள்ளும் ஜனாதிபதி எங்களுக்குக் கிடைத்திருக்கிறார். அதனால் நாங்கள் அவர் சொல்வதைக் கேட்கத் தயாரில்லை” என்று  பிரான்ஸ் நாட்டின் தொழிற்சங்கத் தலைவர் ஒருவர் கூறியிருக் கிறார். பிரான்சின் செலெஸ்டட் பகுதிக்கு அவர் பயணம் செய்தபோது,  அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள். ஓய்வூ தியத்திட்டத்தை திரும்பப் பெறாதவரையில் அவர் செல்லுமிடங் களில் எதிர்ப்பை பதிவு செய்வோம் என்று தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.