tamilnadu

img

ஓபிஎஸ் சகோதரர் உட்பட 6 பேர் விடுதலை பூசாரி நாகமுத்து தற்கொலை வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு

திண்டுக்கல், நவ.13-  ஓபிஎஸ் சகோதரர் உட்பட 6 பேர்  விடுதலை செய்யப்பட்ட பூசாரி நாக முத்து தற்கொலை வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் கூறினார்.  திண்டுக்கல் பட்டியலின சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பூசாரி நாகமுத்து தற்கொலை வழக்கில் புதனன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா உள்ளிட்ட 6 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தது.  இதனையடுத்து இவ்வழக்கில் இறந்து போன பூசாரி நாகமுத்து வுக்காக வாதாடிய வழக்கறிஞர் ப.பா.மோகன் செய்தியாளர்களி டம் கூறியதாவது: இவ்வழக்கில் மேல்முறையீடு செய்யப்படும். தேனி மாவட்டம் தென்கரை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கள்ளிப்பட்டியில் உள்ள சுப்புராஜ் என்பவரது மகன் பூசாரி நாக முத்து கடந்த 8.7.2012 ஆம் தேதி தற்கொலை குறிப்பெழுதி வைத்து விட்டு இறந்துவிட்டார். அந்த  தற்கொலை குறிப்பில் கைலாச நாதர் கோவிலில் 7 ஆண்டுகளாக பூசாரியாக இருந்த தன்னை அன்பர் குழுவைச் சார்ந்த பழனிச்சாமி, வெங்கிடுசாமி ஆகியோர் சாதியைச் சொல்லி திட்டி இழிவுபடுத்தி 5.5.2012 அன்று விரட்டியடித்தனர். இதுதொடர்பாக பூசாரி நாகமுத்து தென்கரை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரை தென்கரை காவல்துறை அதிகாரி கள் வன்கொடுமை வழக்காக பதிவு செய்யவில்லை. அதன்பிறகு 6.5.2012 அன்று இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜா, பூசாரி நாகமுத்துவின் தந்தையான சுப்புராஜை தென்கரைக்கு வரச்சொல்லி மிரட்டினார். பழனிச்சாமி, வெங்கிடுசாமி மீது கொடுக்கப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில் நடப்பதே வேறு என்று மிரட்டியிருக் கிறார். அதற்கு எதிராகவும் பூசாரி நாகமுத்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் அன்றை க்கு இருந்த அதிமுக ஆட்சியில் ஓ.பன்னீர்செல்வம் பலமான அதிகாரத்தில் இருந்த காரணத்தால் தென்கரை போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. ஆனால் பூசாரி நாகமுத்து தொடர்ந்து மிரட்டப்பட்டார். 

வன்கொடுமை  வழக்கு பதியாத காவல்துறை 

வன்கொடுமை வழக்கு என்றால் புகார் கொடுத்தவுடன் கட்டாயமாக வழக்குப் பதிவு செய்ய  வேண்டும். ஆனால் தென்கரை காவல்நிலையம் எப்.ஐ.ஆர். போடவில்லை. வன்கொடுமை வழக்கும் பதியவில்லை.  அதன்பிறகு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வழிகாட்டு தல்படி இவ்வழக்கில் எப்.ஐ.ஆர். போடப்பட்டது. வன்கொடுமை வழக்கும் பதியப்பட்டது. ஆனால் தென்கரை காவல் நிலையம் வழக்கை முறையாக  விசாரிக்கா மல் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 2வது எதிரி மணிமாறன், இறந்து போன பாண்டி, தலித் சமூகத்தைச் சேர்ந்த சிவக்குமார், ஞானம், லோகு, இன்னொரு சிவக்குமார். தொடர்ந்து நாகமுத்துவையும், அவரது குடும்பத்தாரையும் மிரட்டி வந்தனர். காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று அடிக்கவும் செய்தார்கள். ஆனால் எவிடன்ஸ் கதிர் மூலமாக எதிர்ப்புகளை மீறி நாகமுத்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி வந்தனர். 26.11.2012 ஆம் ஆம் தேதி வழக்கை வாபஸ் பெற வேண்டும். இல்லையென் றால் உன் மீது திருட்டு வழக்கு தொடுப்போம் என்று மிரட்டியதை யடுத்து கடிதம் எழுதி வைத்துவிட்டு நாகமுத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் கிராம மக்கள் ஆடியோவுடன் சென்று தென்கரை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் தென்கரை காவல்நிலையம் கொடுத்த புகார்கள் மீது எந்த வழக்கும் பதியவில்லை. விசாரிக்க வில்லை. ஆகவே இந்த வழக்கை  கூட சந்தேக மரண வழக்காக பதிந் தார்கள். மக்கள் போராட்டத்திற்கு பிறகு 306 பிரிவு வழக்காக மாற்றப் பட்டது. அதன் பிறகு இந்த வழக்கை எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்றும், சிபிசிஐடி வழக்காக மாற்றவேண்டும் என்றும் நாக முத்துவின் தந்தை சுப்புராஜ் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்ட பிறகு தான் 3 ஆண்டுகள் கழித்து இவ்வழக்கு வன்கொடுமை வழக்காக பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு சாட்சிகள் விசாரிக்கப் பட்டன.

நீதிமன்றம்,  காவல்துறையில் சாதியம் 

இவ்வழக்கில் குற்றப்பத்தி ரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை முறையாக நடக்க வேண்டும் என்று சொன்னால் தென்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட தேனி மாவட்ட நீதிமன்றத்தில் நடத்தக் கூடாது, ஏனெனில் ஆதிக்க சக்திகள், ஆளுங்கட்சியை சார்ந்திருக்கிறவர்கள், சாட்சிகளை மிரட்டுவார்கள் என்று கருதி தான் தேனி மாவட்டத்திலிருந்து திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. திண்டுக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டது. அதன் பிறகு எஸ்.சி.எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு நடந்து வந்தது. இவ்வழக்கில் 23 சாட்சிகளை விசாரித்துள்ளோம். 45  வழக்குகள் போடப்பட்டன. இந்த வழக்கில் அற்புதமான சாட்சிகள் உண்டு. மெஜாரிட்டி உண்டு. ஆனால் எங்களுக்குத் தெரியும். நீதிமன்றங்களிலும், காவல்துறை யிலும் சாதியம் இருக்கிறது. இந்த வழக்கை முறையாக விசாரிக்காத காவல் துறை என்று இந்த வழக்கில் சுட்டிக்காட்டினோம்.  நாகமுத்துவின் தற்கொலை குறிப்பில் சேது  என்ற டி.எஸ்.பி., உமா, இளங்கோ, சேதுபதி என்ற 3 போலீசாரும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உத வியாக இருந்தார்கள். அவர் களையும் இந்த வழக்கில் சேர்த்து  குற்றம் சாட்டப்பட்டவர்களாக்க முயற்சித்தோம். முடியவில்லை. இருந்தாலும் கூட, கீழமை நீதி மன்றம் குற்றவாளிகளை விடு தலை செய்திருக்கிறது. இந்த விடு தலையையும், தீர்ப்பையும் எதிர்த்து நிச்சயமாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடுசெய்வோம். 

எந்த சாட்சியத்தையும் முன்வைக்காத எதிர்தரப்பினர்

இந்த வழக்கு வன்கொடுமை வழக்கு. எங்கள் வழக்கை  நிரூபித்தி ருக்கிறோம். அதை எதிர்த்து எதிர் தரப்பினர் எந்த சாட்சியத்தையும் முன்வைக்கவில்லை. அது தற்கொலை என்று நிரூபிக்கப்பட்டி ருக்கிறது. தற்கொலை குறிப்பில் சுட்டிக்காட்டியவை நிரூபிக்கப் பட்டுள்ளது. எனவே இவ்வழக்கில் மேல்முறையீட்டுக்கான காரணம் உண்டு. வழக்கில் நாங்கள் வெல்லு வோம்.  சாதியம் எங்கெல்லாம் தலைவிரித்தாடுகிறதோ, அதை எதிர்க்க வேண்டிய கடமை மக்க ளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் உண்டு. அந்த அடிப்படையில் நீதிக் கான போராட்டத்தை தொடர்வோம். இவ்வாறு  வழக்கறிஞர் ப.பா. மோகன் தெரிவித்தார். (நநி)