tamilnadu

img

தமிழ்நாடு அரசு பணிகளில் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்

தமிழ்நாடு அரசு பணிகளில் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டில் சங்கத்தின் மாவட்ட தலைவர் பூங்குழலி தலைமையில் நடைபெற்ற வாழ்வாதாரப் பேரணியில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முகமது உசேன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் அம்பேத்கர் பேபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காஞ்சிபுரத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் லெனின் தலைமையில் நடைபெற்ற    வாழ்வாதாரப் பேரணியில் தங்கத்தின் மாவட்ட செயலாளர் மருதன் தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் சீதாராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருவள்ளூரில் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஏ.மணிகண்டன் தலைமையில் பேரணி நடைபெற்றது. மாவட்டத் தலைவர் க.திவ்யா, மாவட்டச் செயலாளர் கௌ.மெல்கிராஜாசிங், மாநில துணைத் தலைவர் எஸ்.காந்திமதிநாதன், ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி கோ.இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.