tamilnadu

img

நோன்புக் கஞ்சி தயாரிக்க 6,500 மெட்ரிக் டன் அரிசி

சென்னை, மார்ச் 10-  நோன்புக் கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 6,500 மெட்ரிக் டன் அரிசி வழங்க  முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.  கடந்த ஆண்டுகளைப் போலவே, 2023 ஆம் ஆண்டிலும் ரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல் களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. 2023 ஆம் ஆண்டு, ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாக பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின்கீழ் நோன்பு கடைபிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் பச்சரிசி  வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  பள்ளிவாசல்களுக்குத் தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க  மாவட்ட ஆட்சியர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப் பட்டுள்ளன. இதன்படி, 6,500 மெட்ரிக் டன் அரிசி மொத்த  அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இத னால், அரசுக்கு ரூ.25 கோடியே 63 லட்சத்து 60 ஆயிரம் கூடுதல் செலவினம் ஏற்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.