tamilnadu

img

இந்திய மாணவர் சங்கத்தின் 55 ஆவது அமைப்பு தின பேரணி!

திருப்பூர், டிச.29 - இந்திய மாணவர் சங்கத்தின் 55 ஆவது அமைப்பு தினத்தையொட்டி, பல்லடத்தில் ஞாயிறன்று பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கம் 55 ஆவது அமைப்பு தினத்தையொட்டி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அமைப்பு தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஞாயிறன்று நடை பெற்றது. பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்பிருந்து, பேரணியை மாணவர் சங்க முன்னாள் மாவட்டச் செய லாளர் டி.ஜெயபால் துவக்கி வைத் தார். இப்பேரணி பல்லடம் - மங்கலம்  சாலையில் துவங்கி, என்ஜிஆர் சாலையில் நிறைவடைந்தது.  இதைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு மாணவர் சங்க  மாவட்டத் தலைவர் கல்கிராஜ் தலைமை வகித்தார். இதில் சங்கத் தின் அகில இந்திய துணைத் தலை வர் நிதீஷ் நாராயணன் சிறப்புரை யாற்றினார். மாநிலச் செயலாளர் கோ.அரவிந்த்சாமி, மாநிலத் தலை வர் தௌ.சம்சீர் அகமது, மாவட்டச் செயலாளர் பிரவீன் குமார், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாலினி உள்ளிட்டோர் பேசினர்.  முன்னதாக, அனைத்து கல்லூரி களிலும் மாணவர் பேரவை தேர்தலை நடத்தக் கோரி கையெ ழுத்து இயக்கம் நடைபெற்றது. இதனை நிதீஷ் நாராயணன் கையெ ழுத்திட்டு துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் 300-க்கும் மேற் பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட னர்.