tamilnadu

img

ஆப்கன் மீது பாகிஸ்தான் தாக்குதல்

குழந்தைகள் உட்பட 40 பேர் பலி காபூல், ஏப்.17- ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மற்றும் குணார் ஆகிய இரு மாகாணங்க ளின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் விமானம் அதிரடியாக வான்வழி தாக்கு தலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில், குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரி ழந்தனர். இச்சம்பவத்திற்கு ஆப்கா னிஸ்தானின் அமைதி கண்காணிப்ப கத்தின் நிறுவனர் மற்றும் பத்திரிகை யாளரான ஹபீப் கான் டிவிட்டரில் கண்ட னம் தெரிவித்துள்ளார். “முதன்முறையாக பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் ஆப்கா னிஸ்தான் மண்ணில் தலிபான்களின் கீழ் குண்டுவீசி 40-க்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொன்றுள்ளது என்று பதிவில் குறிப்பிட்டுள்ளார்.இந்  தச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர் களின் உடல்களின் படத்தையும் ஹபீப் கான் பகிர்ந்துள்ளார். ஆப்கானிஸ்தா னில் பாகிஸ்தான் நடத்தும் போர்க்குற் றங்கள் குறித்து கவனிக்குமாறு சர்வ தேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் அம்னஸ்டி இன்டர்நேஷனலை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கோஸ்ட் மற்றும் குனார் மாகாணங் களின் உள்ளூர் அதிகாரிகள், சனிக்  கிழமை பாகிஸ்தான் விமானம் மாகா ணங்களின் பல்வேறு பகுதிகளில் வான்  வழித் தாக்குதல்களை நடத்தியதை உறுதிப்படுத்தினர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தூதர் மன்சூர் அஹ்மத் கானை அழைத்த தலிபான்கள், இந்த  சம்பவம் குறித்து பாகிஸ்தான் அரசுக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.  இந்தக் கூட்டத்தில் ஆப்கானிஸ் தாதன் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முட்டாகி, துணைப் பாது காப்பு அமைச்சர் அல்ஹாஜ் முல்லா ஷிரின் அகுந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.