திருவனந்தபுரம், ஆக.13- கேரளம் நான்கு லட்சம் குடும்பங்களின் ‘பாதுகாப்பான வீடு’ என்கிற கனவை நனவாக்கியுள்ளது லைப் திட்டம். இத்திட்டத்திற்கு இதுவரை 13,736.10 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இது 2017 முதல் 2023 ஜூலை 31 வரையிலான எண்ணிக்கை. ஜூலை 31 வரை 3,48,026 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 1,17,762 கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் அரை லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதையும் சேர்த்து நான்கு லட்சத்தைக் கடந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2024இல் ஐந்து லட்சமாக இருக்கும். 174 அலகுகள் கொண்ட நான்கு வீட்டுத் தொகுதிகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 25 குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வருகினறன. இதில், பிஎம்ஏஒய் ஊரக-நகர்ப்புறவீட்டு வசதி திட்டத்தின் மூலம் ரூ.2024.65 கோடி மட்டுமே ஒன்றிய அரசால் வழங்கப்பட்டது. இந்த உண்மை விபரங்களை மறைத்து, லைப் திட்டம் ஒரு ஒன்றிய அரசின் திட்டம் என சங் பரிவாரங்களும் - யுடிஎப்பும் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றன.