tamilnadu

img

திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 4 வீடுகள் எரிந்து சேதம்: ஆடு, கோழிகள் உயிரிழப்பு

திடீரென ஏற்பட்ட தீ விபத்தில்  4 வீடுகள் எரிந்து சேதம்: ஆடு, கோழிகள் உயிரிழப்பு

திருவாரூர், ஜூலை 6 - திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட திலகர் 2 ஆவது தெருவில் வசித்து வரும் ரவிச்சந்திரன் என்பவர் வீட்டில் ஞாயிறன்று காலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. அக்கம்பக்கத்தினர் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை கட்டுப்படுத்தினர். ஆனாலும் அருகே இருந்த குமரேசன், ராஜீவ் காந்தி, அன்பரசன் ஆகியோரின் வீடுகளும் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தன. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தியதால் அருகே இருந்த பல கூரை வீடுகள் தப்பின. திருவாரூர் நகரப் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆடு-கோழிகள் உயிரிழந்தன. மேலும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள், பொருட்கள் சேதமடைந்தன. தகவலறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் எம்.டி. கேசவராஜ், மாவட்ட குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், நகரக் குழு உறுப்பினர் என்.ராஜசேகர், வி.சுதா, ஜி.பவுன்ராஜ், வாலிபர் சங்கர் நிர்வாகி வானதீபன் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.