tamilnadu

img

ரூ.405 கோடியில் 4,644 புதிய குடியிருப்புகள்

சென்னை, டிச. 7- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.405.90  கோடி செலவில் 8 மாவட்டங் களில் 15 திட்டப்பகுதிகளில் கட்டப் பட்டுள்ள 4644 அடுக்குமாடி குடியிருப்பு களை காணொலிக் காட்சி வாயிலாக புதனன்று (டிச. 7) திறந்து வைத்தார். அந்த வகையில், அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஈரோடு  மாவட்டம், கண்ணன்கரடு (மைலம் பாடி) திட்டப்பகுதியில் 492 அடுக்கு மாடி குடியிருப்புகள், நேதாஜி நகர் திட்டப்பகுதியில் தரை மற்றும்  2 தளங்களுடன் ரூ.17.70 கோடி செலவில் 204 அடுக்குமாடி குடியிருப்பு கள், திருப்பூர் மாவட்டம் புதூர் திட்டப்பகுதியில் தரை மற்றும் 2 தளங்க ளுடன் ரூ.12.78  கோடி செலவில் 156 அடுக்குமாடி குடியிருப்புகள்,

மதுரை மாவட்டம், கருத்தபுளியம்பட்டி  திட்டப்பகுதியில் தரை மற்றும் 3  தளங்களுடன் ரூ.84.20 கோடி செல வில் 912 அடுக்குமாடி குடியிருப்புகள்.  கடலூர் மாவட்டம், பனங்காட்டு காலனி திட்டப்பகுதியில் தரை மற்றும்  3 தளங்களுடன் ரூ.22.94 கோடி செலவில் 240 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் ரூ.405.90 கோடி செலவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 4,644 குடியிருப்புகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.   இந்த குடியிருப்புகள், ஒவ்வொன்றும் தலா 400 சதுர அடி பரப்பளவுடன், ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை  மற்றும் கழிவறை ஆகிய வசதிகளுடன்  கட்டப்பட்டுள்ளது.  மேலும், அனைத்து குடியிருப்பு வளாகங்களும், சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவு நீரேற்று வசதி,  சிறுவர் பூங்கா, மழைநீர் சேக ரிப்பு கட்டமைப்பு  ஆகிய வசதிகளு டன்  அமைக்கப்பட்டுள்ளது.  4,500 பயனாளிகளுக்கு குடியிருப்பு களுக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 2 பயனாளி களுக்கும்,  350 பயனாளிகளுக்கு கிரயப் பத்திரங்களை வழங்கிடும் அடையாளமாக 4 பயனாளிகளுக்கும் ஆணைகளை வழங்கினார்.   இதில் வீட்டுவசதித் துறை அமைச் சர் சு.முத்துசாமி, ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.