tamilnadu

img

கடல் பயணத்தில் உள்ள அச்சத்தைப் போக்க 302 கி.மீ. தூரம் பாய்மரப்படகில் கடல் பயணம்

மயிலாடுதுறை, ஜூன் 6- கடல் பயணத்தில் உள்ள அச்சத்தைப் போக்க 302 கி.மீ. தூரம்  பாய்மரப்படகில் கடல் பயணம் மேற்கொண்டுள்ளனர் தேசியமாணவர் படையினர்.  மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் துறைமுகத்தில்                             தேசிய மாணவர் படையினர் பாய்மரப் படகில் கடல் பயணம் (சாகசம்) மேற்கொண்டுள்ளனர். அவர்களது ஐந்தாவது நாள் பயணத்தை பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் நிவேதா.எம்.முருகன் துவக்கி வைத்தார்.  கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாடு தேசிய மாணவர் படை கப்பல்  படை (5) பிரிவு, புதுச்சேரி தேசிய மாண வர் கப்பல் படை (ஒன்றாம் பிரிவு) மாண வர்கள் இணைந்து நடத்தும் கடல்சார் பாய்மரப்படகு சாகசப் பயணம் ஜூன் 2-ஆம் தேதி முதல் புதுச்சேரியில் நடை பெற்று வருகிறது. 25 மாணவி கள் உட்பட 60 தேசிய மாணவர் படை மாணவர்கள் கடல் சாகச பாய்மரப் படகு செலுத்தும் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.  பாய்மரப் படகு பயணத்தின் இலக்கு 302 கிலோமீட்டர் என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. புதுச்சேரி- கடலூர்-பரங்கிப்பேட்டை-பூம்புகார் வழியாக காரைக்கால் சென்றடையவேண்டும். மீண்டும் பயணித்த பாதையில் மீண்டும் புதுச்சேரி வந்தடைய வேண்டும்.

கடல் சாகசத்தின் ஐந்தாம் நாள்  பயணத்தை பூம்புகார் துறை முகத்தில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பி னர்  தொடங்கி வைத்து சாகச குழு வில் பங்கேற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பொறையார் த.பே.மா.லு கல்லூரி முதல்வர் ஜான்சன் ஜெயக்குமார் மாணவர்களை வாழ்த்தினார்.  நிகழ்வில் இந்தியக் கடலோரக் காவல் படை அதிகாரிகள், தேசிய மாண வர் படை அதிகாரிகள் மற்றும் பூம்பு கார் கிராம மக்கள் கலந்துகொண்டனர். இந்த பாய்மரப்படகு பயணத்தின் மூலம் தேசிய மாணவர் படையினரின்  திறன் மேம்படும். கடல் பயணம் குறித்த அச்சம் நீங்கும். மாணவர்கள் ஆயுதப் படையில் மாணவர்கள் சேரும் எண்ணத்தை தூண்டும் என்கின்றனர் விஷயமறிந்தவர்கள். 2024-ஆம் ஆண்டு ஜனவரியில்  தில்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் தேசிய மாணவர் படை யினருக்கு நடத்தப்படும் போட்டி களில் ஒன்று கடல் சாகசப் பயணம்.  அதன் முன்னோட்டமாக இந்த கடல்  (சாகசம்) பயணம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.