tamilnadu

img

யானை தந்தத்தால் பொம்மை செய்து விற்ற 3 பேர் கைது

மதுரை, மார்ச் 11-  யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மை யை விற் பனை செய்த 3 பேரை  வனத்துறையினர் கைது செய்தனர்.  மதுரையில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட  பொம்மைகள்  விற்பனை செய்யப்படுவதாக மதுரை சரக வனத்துறை அலுவலகத்திற்கு ரகசிய தக வல் கிடைத்தது. இதனையடுத்து மதுரை மாவட்ட  வனச் சரக அலுவலர்கள் பல்வேறு பகுதிகளிலும் கடந்த  ஒரு மாதமாக விசாரணை நடத்தி வந்தனர்.  இந்நிலையில் மதுரை ஆனையூர் அருகே ஜெ. ஜெ.  நகரை சேர்ந்த பொன் இருளன் (எ) முத்து,  கோசா குளம் பாண்டியன் நகரைச் சேர்ந்த பீட்டர் சகாயராஜ் ஆகிய இருவரும் யானையின் தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மை ஒன்றை விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.  இதனையடுத்து இருவரையும் வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த யானை தந்ததால் செய்யப்பட்ட பொம்மையானது விருது நகர் மாவட்டம்  சாத்தூர் தெற்குரத வீதியை சேர்ந்த ரஞ்சித்  ராஜா என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ரஞ்சித்ராஜாவையும் வனத்துறை யினர் பிடித்து விசாரணை நடத்தினர். மூன்று பேர் மீதும் வனத்துறையினர் பல்வேறு பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்  படுத்தி  மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.  இந்த  வழக்கில் மேலும் இருவரை தேடி வருகின்றனர். யானை தந்தம் எங்கிருந்து வாங்கப்பட்டது என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரு கின்றனர்.