புதுதில்லி,மார்ச் 19- தமிழகத்தில் மார்ச் ஒன்றாம் தேதி வரை அகல ரயில் பாதையில், 3,064 கிலோ மீட்டர் வரை மின் மயமாக்கப்பட்டிருப்பதாக ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் பாரிவேந்தர் எம்.பி., ரயில்வே துறையின் பணிகள் குறித்து எழுத்துப்பூர்வமாக கேள்விகளை எழுப்பினார். தமிழகத்தில் இதுவரை எத்தனை தூரத்திற்கு அகல ரயில்வே பாதைகளில் மின்மய மாக்கும் பணிகள் முழுமையாகவோ, பாதியாகவோ நடந்து முடிந்திருக்கின்றன என்றும், இந்த பணிகள் அனைத்தும் எப்பொழுது முழுமையாக முடியும் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதிலில், அகல ரயில் பாதைகளை மின்மயமாக்கும் பணிகளை ரயில்வேதுறை வேகமாக செய்து வருகிறது. கடந்த 2007 முதல் 2014 ஆம் ஆண்டு காலகட்டத் தில் 4,337 கிலோ மீட்டர் தூர அளவிலான ரயில்வே பாதை கள் மின்மயமாக்கப்பட்டிருந்த நிலையில், 2014-2021 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் இது 455 சதவிகிதம் வரை அதி கரித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த மார்ச் 1 ஆம் தேதி வரை மொத்தம் உள்ள 3 ஆயிரத்து 864 கிலோ மீட்டர் தூர அகல ரயில் பாதைகளில் 3 ஆயிரத்து 64 கிலோ மீட்டர் தூர பாதைகளில் மின்மயமாக்கும் பணிகள் முடிந்துள்ளன. எஞ்சிய ரயில் பாதைகளில் ஒவ்வொரு கட்டமாக பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.