tamilnadu

img

அவிநாசி அருகே 3 ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட புதிய கற்கால கருவி உற்பத்தியிடம் கண்டுபிடிப்பு

அவிநாசி அருகே 3 ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட புதிய கற்கால கருவி உற்பத்தியிடம் கண்டுபிடிப்பு

திருப்பூர், ஜூன் 20 – திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டத் திற்கு உட்பட்ட தத்தனூர் அடிபெருமாள் கோவில் பகுதியில் சுமார் 3 ஆயிரம்  ஆண்டுக்கு முற்பட்ட, புதிய கற்காலக் கருவி உற்பத்தியிடம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மனித குல வரலாற்றில் சுமார் 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் வரை புதிய கற்காலம் எனப்படுகிறது. வெண்கலம் கண்டறிவதற்கு முன்பாக மனிதர்கள் கற்க ளைக் கூர் தீட்டி ஒழுங்கமைக்கப்பட்ட கரு விகளாக, ஆயுதங்களாக பயன்படுத்தி னர். வேட்டை சமூகத்தில் இருந்து மாறி, ஓர் இடத்தில் நிலையாக தங்கி வேளா ண்மை, கால்நடை வளர்ப்பில் ஈடுபடத் தொடங்கியது புதிய கற்காலம் என மனித குல வரலாற்று ஆய்வறிஞர்கள் கூறு கின்றனர். அவிநாசி வட்டம் தத்தனூர் அடிபெரு மாள் கோவில் வளாகம், ராயர்பாளையம் வண்ணாம்பாறை சிறிய மலைக்குன்று ஆகிய இடங்களில் கற்கருவிகளைக் கூர்தீட்டும் உற்பத்தி நடைபெற்றதாகக் கருதப்படும் இடங்களை, அண்மையில் யாக்கை மரபு அறக்கட்டளைக் குழுவினர் கண்டறிந்து ஆவணப்படுத்தி உள்ளனர். யாக்கை குழுவின் குமரவேல் இராமசாமி, சுதாகர் நல்லியப்பன், வெங்க டேஷ் தனபால் ஆகியோருடன் யாக்கை  நூலகத்தில் கல்வி உள்ளகப் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் அடங்கிய குழு வினர் இங்கு கள ஆய்வு மேற்கொண்ட னர். இது குறித்து யாக்கை குழுவினர் தெரிவித்ததாவது:  புதிய கற்கால பண்பாட்டுக் காலத்தைச் சேர்ந்ததாக அறியப்படும் தொல்லியல் சான்றுகள் வடதமிழகம், தென்தமிழகத்தில் சில இடங்களில் அடை யாளம் காணப்பட்டுள்ளன. முதன்முறை யாக கொங்குப் பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட தேய்ப்பு குழிகள் இங்கு ஒரே இடத்தில் கண்டறியப்பட்டிருக்கிறது. இது  இப்பகுதியில் புதிய கற்கால மனிதர் களின் நடமாட்டம் இருந்ததை உறுதி செய்வதாக உள்ளது. கொங்கு வட்டாரத்தில் புதிய கற்கால இடங்கள் குறித்த சான்றுகள் ராபர்ட்  புரூஸ் புட் என்பவரின் ஆவணங்களில் கிடைத்துள்ளன. இதன்பிறகு அண்மை யில் நொய்யல் ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியில் மோளப்பாளையம் எனும் இடத்தில் நடைபெற்ற அகழாய்வில் புதிய கற்கால பண்பாடு தொடர்பான சான்று கள் கிடைத்துள்ளன. இச்சூழலில் தற்போது அடையாளம் காணப்பட்டிருக்கும் இவ்விடம் தொல்லி யல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். தற்போது கண்டறியப்பட்ட தேய்ப்பு குழிகள் வேளாண் நோக்கத் திற்கு கல்லாயுதங்களை வழவழப்பாக்க வும், கூர் தீட்டவும் பயன்படுத்தப்பட்ட இடங்களாகும். தத்தனூர் அடிபெருமாள் கோவில் வளாகத்தில் சுமார் 104 புதிய கற்கால கருவி உற்பத்தி பாறைக் குழிகளும் (Grooves), வண்ணாம்பாறை எனும் இடத்தில் சுமார் 7 கற்குழிகளும் அடை யாளம் காணக்கூடிய வகையில் உள்  ளன. இக்குழிகள் அனைத்தும் அள விலும், அமைப்பிலும் தனித்துவம் பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக, இவ்வகை கற்குழி கள் மிகுதியாகக் கிடைக்கும் இடங்களான விழுப்புரம், திருவண்ணாமலை பகுதி களில் காணப்பெறும் குழிகளோடு ஒப்பி டும்போது இங்கு சில கற்குழிகள் அதிக ஆழம் கொண்டுள்ளன. ஒரே இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கற்குழிகள் காணப்படுவதும் இவ்விடத்தின் தொல்லி யல் முக்கியத்துவத்தை உணர்த்து கிறது. இங்குள்ள பாறைக் குழிகளில் 54 செ.மீ. நீளமும், 16.5 செ.மீ. அகலமும் கொண்டுள்ள ஒரு குழி 4.2 செ.மீ. ஆழம் கொண்டுள்ளது. இதுவே அளவில் பெரிய குழியாகும். ஏனையவை சராசரியாக சுமார் 30 முதல் 45 செ.மீ வரையிலான நீளமும் 10 முதல் 18 செ.மீ வரையிலான அகலமும் கொண்டிருக்கின்றன. பொதுவாக இவ்வகை தொல்லியல் இடங்கள், வலிமையான பாறைத் தன்மை யுடைய குன்றுகளிலும் அருகில் வற்றாத நீரூற்று அல்லது சுனை இருக்கும் இடங்களிலும் மட்டுமே இருக்கும். தற்போது கண்டறியப்பட்ட இவ்விடம்  கிழக்குத் தொடர்ச்சி மலையில் காணப் படும் பாறையின் தன்மையுடையவை. இவ்விரண்டு இடங்களிலும் சுனை, நீரூற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், கற்குழிகள் காணப்பெறும் அடிபெருமாள் கோவில் வளாகத்தின் வெளியே நுண் கற்கால கற்கருவிகளை (Microlithic Stone Tools) மேற்பரப்பில் காண முடிந்தது. அவை யாவும் குவார்ட்ஸ் கற்களால் ஆன பிளேடு வகைகளாகும். வண்ணாம்பாறை கற்குழிகள் உள்ள இடத்தின் அருகில் இரும்புக் கசடுகளைக் குவியலாகக் காண முடிந்தது. இவையும் கூட இப்பகுதியின் தொல்லியல் முக்கியத்துவத்தை உணர்த்தும் இணை சான்று ஆவணங்களாகும். அடிபெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள பண்டைய கற்குழிகள் வழி பாட்டுத் தொன்மமாக மாறியுள்ளன. இங்கிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள வண்ணாம்பாறை மலையிலும் வழிபாடு நடைபெறுகிறது. ஓரிடத்தில் வழி பாடு நடத்திய பின்னர் மற்றொரு இடத்தில் வழிபாடு நிகழ்த்தும் வழக்கம் இருந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். அடிபெரு மாள் கோவில் வளாகத்தில் உள்ள கற்குழிகள் பெருமாள் பாதமாகக் கருதப்பட்டு வழிபாட்டில் தொடர்கிறது என்று யாக்கை குழுவினர் கூறினர்.