tamilnadu

img

சோசலிச வியட்நாம் மாபெரும் வளர்ச்சி : பிரகாஷ் காரத் பாராட்டு

வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி யின் (சிபிவி) இரண்டு குழுக்கள் நவம்பர் மாதத்தில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமை யகத்திற்கு வருகை தந்தன.  முதல் குழுவினர் வியட்நாம் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பி னர் நிகுயென் திதுஹா தலைமையில் 8 நவம்பர் 2024 அன்று வந்தனர். இக்குழுவில் 12 உறுப்பினர்கள் இருந்த னர். எம்.ஏ. பேபி மற்றும் இதர தலை வர்களுடன் நீண்ட கலந்துரையாடல் நடைபெற்றது. 

இந்தியா - வியட்நாம் மக்கள் இடையேயான பரஸ்பர உறவுகளையும் கலாச்சார பரிமாற்றங்களின் முக்கி யத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். இரண்டாவது குழுவினர் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், ஹோ சி மின் தேசிய அரசியல் அகாடமி தலைவரு மான பேரா. நிகுயென் சுவான் தாங்க் தலைமையில் 11 நவம்பர் 2024 அன்று வந்தனர். 14 உறுப்பினர்கள் கொண்ட இக்குழு மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் மற்றும் கட்சி தலைவர்களுடன் விரிவான கலந்து ரையாடலில் ஈடுபட்டனர். வியட்நாமின் பொருளாதார வளர்ச்சி குறித்து சுவான் தாங்க்  விரிவாகப் பேசினார். தற்பொழுது வியட்நாமின் தனி  மனித வருமானம் 5,600 டாலராக  உயர்ந்துள்ளது. இது கடந்த 40 ஆண்டு களில் 200 டாலரிலிருந்து பெரும் உயர்வை காட்டுகிறது. இவ்வளர்ச்சிக்கு மார்க்சிய - லெனினிய கோட்பாடுகளின் சரியான அமலாக்கமே மிக முக்கிய காரணமாக அமைந்தது என அவர் விவரித்தார்.

இரு கட்சிகளும் மார்க்சிஸ்ட்-லெனினிய கோட்பாடுகளை பின்பற்றி வருகின்றன. மாறிவரும் சர்வதேச சூழலில் அவற்றின் அமலாக்கத்தை ஆய்வு செய்து, மேம்படுத்த வேண்டி யதன் அவசியத்தையும் அவர்கள் வலி யுறுத்தினர். பிரகாஷ் காரத்,  வியட்நாம் கட்சியின் வளர்ச்சிக்கு பாராட்டுகள் தெரிவித்தார். மேலும் வரவிருக்கும் 2026ஆம் ஆண்டு கட்சி மாநாட்டுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இந்தச் சந்திப்பு இந்தியா -  வியட் நாம் இடையேயான நட்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.