மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 24 ஆவது மாநில மாநாட்டின், செம்படை பேரணி, பொதுக் கூட்டத்தை விளக்கி விழுப்புரம் நகரம் முழுவதும் மூன்று நாட்கள் ஆட்டோ பிரச்சாரம் நடைபெறுகிறது. இந்த பயணத்தை கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி துவக்கி வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், வரவேற்குழுத் தலைவர் ஆர்.ராமமூர்த்தி, மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.