tamilnadu

img

கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சிபிஎம் போராட்டம்

புதுக்கோட்டை, மே 30 - குடிமனைப் பட்டா கேட்டு கந்தர்வ கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் எம்.சின்னதுரை எம்எல்ஏ., தலைமையில் செவ்வாய்க் கிழமை நடைபெற்ற போராட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை தாலுகாவில் 36 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான குடும்  பங்களுக்கு சொந்தமாக வீட்டு மனைப் பட்டா இல்லை. இதில் பட்டியலின மக்  கள், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும்  பிற்படுத்தப்பட்டவர்கள், இஸ்லாமி யர்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து சமூகத்தினரும் அடங்குவர். இவர்கள் காலம் காலமாக பல்வேறு வகையான புறம்போக்கு நிலங்களில் வசித்து வரு கின்றனர். இவர்கள் குடியிருக்கும் இடங்க ளுக்கு பட்டா கேட்டு, மாவட்ட ஆட்சியர் உள்  ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக் கொடுத்து வலியுறுத்தி வந்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழி லாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் இதற்காக பல கட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளது. ஆனாலும், இவர்களுக்கு பட்டா கிடைத்தபாடில்லை. இதற்கு நத்தம் தவிர வேறுவகையான புறம்போக்குகளில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க முடி யாது என அதிகாரிகள் சாக்குப்போக்கு சொல்லி வந்துள்ளனர். ஆனால், நத்தம் புறம்போக்கில் வசிப்பவர்களுக்குகூட பல இடங்களில் பட்டா வழங்கப்படவில்லை என்பதே உண்மை நிலையாக உள்ளது. இந்நிலையில், எந்தவகையான புறம்போக்காக இருந்தாலும் அந்த இடத்தில் பல வருடங்களாக குடியிருந்து வருபவர்களுக்கு வகைமாற்றம் செய்து  பட்டா வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்  வாய்க்கிழமை வட்டாட்சியர் அலுவல கத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடை பெற்றது.

இதனைத் தொடர்ந்து கந்தர்வ கோட்டை வெள்ளைமுனியன் கோவில் திடலில் இருந்து கந்தர்வகோட்டை சட் டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ராமையன், எஸ்.சங்  கர், கந்தர்வகோட்டை தெற்கு ஒன்றியச் செயலாளர் வி.ரெத்தினவேல், வடக்கு  ஒன்றியச் செயலாளர் ஜி.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் அதிகமா னோர் வட்டாட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்  கொள்ளவும், அவர்களின் குறை களைக் கேட்கவும் மாவட்டத்தில் இருந்து  உயர் அதிகாரிகள் யாரும் வராததால் மனு தாரர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேசிய வட்டாட்சியர் கே.காம ராஜ், உங்கள் மனுக்கள் அனைத்தும் உடனடியாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். வகைமாற்றம் செய்ய வேண்டிய இடங்களில் அதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்படும். முதல்கட்டமாக தற்போது 50 நபர்க ளுக்கு பட்டா வழங்கப்படும் என்றும், மீத முள்ள மனுக்கள் மீது அடுத்த ஒரு மாத  காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப் படும் எனவும் உறுதியளித்தார். மனைப்  பட்டா கேட்டு அளிக்கப்பட்ட 1500-க்கும் மேற்பட்ட மனுக்களை எம்எல்ஏ எம்.சின்னதுரை முன்னிலையில் வட்டாட்சியர் காமராஜ் பெற்றுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.சின்னதுரை எம்எல்ஏ., “அதிகாரிகள் முதல்கட்டமாக 50 பேருக்கு பட்டா கொடுக்க முன்வந்திருப்பதை வரவேற்கி றோம். அதே நேரத்தில் இது வெறும் கண் துடைப்பாக இருக்கக் கூடாது. இங்கே அளிக்கப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வகைமாற்றம் செய்ய வேண்டிய பணிகளை உடனடியாக அதி காரிகள் தொடங்க வேண்டும். எந்தவித சாக்குப் போக்கும் சொல்லாமல் குடி மனை இல்லாத அனைவருக்கும் மனைப்பட்டா கொடுப்பதற்கான அனைத்து வழிகளையும் அதிகாரிகள் சிந்திக்க வேண்டும். தவறும் பட்சத்தில் மீண்டும் மிகப்பெரிய அளவிலான போராட்டத்தை நடத்துவோம்” என்றார்.