சு.வெங்கடேசன் எம்.பி., கேள்வியால் அம்பலமானது மோடி அரசு
புதுதில்லி, ஜூலை 24 - 20 ஆண்டு ராணுவப்பணி முடித்தவர்களுக்கு மறுவேலைவாய்ப்பில் அரசு வங்கிகள் தவிர மற்ற இடங்களில் எல்லாம் அதிகபட்சம் 3 சதவீதத்தை தாண்டவே இல்லை. இப்படியிருக்கையில் நான்காண்டு பணிபுரியும் ‘அக்னிபாத்’ வீரர்களுக்கு எதிர்கால வேலைவாய்ப்பு என்ன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: அக்னிபாதை இளைஞர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள இப்போதைய இராணுவ வீரர்களின் நிகழ்காலம் பற்றி அறிந்து கொள்வோம் என்று நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வியை எழுப்பி இருந்தேன். முன்னாள் இராணுவத்தினருக்கு மறு வேலைவாய்ப்பிற்கு எவ்வளவு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது, அப் பணியிடங்களில் மறு வேலைவாய்ப்பு பெற்ற முன்னாள் இராணுவத்தினர் எவ்வளவு சதவீதம் உள்ளனர்? என்பதே என் கேள்வி. (நட்சத்திரக் குறியிடப்படாத கேள்வி எண் : 1149 ஜூலை 22, 2022) அதற்கு பதில் அளித்த பாதுகாப்பு இணை அமைச்சர் அஜய் பட் தந்துள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
முன்னாள் இராணுவத்தினருக்கு மத்திய சிவில் சேவைகள் & அஞ்சல் (CCS & P), மத்திய ஆயுதப் படை (CAPFs), (10 சதவீதம் - குரூப் “சி “ - 10 சதவீதம், குரூப் டி - 20 சதவீதம், மத்திய ஆயுதப் படையில் அசிஸ் டென்ட் கமாண்டன்ட் பதவி வரையிலான நேரடி நியமனங்களில் 10 சதவீதம். மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் (CPSUs), பொதுத் துறை வங்கிகள் (PSBs) குரூப் சி - 14.5 சதவீதம், குரூப் டி - 24.5 சதவீதம், பாதுகாப்பு காவல் கார்ப்ஸ் (DSC) - 100 சத வீதம் என்ற அளவில் இட ஒதுக்கீடு வழங்கப் படுகின்றன. இதனடிப்படையில் பணி நியமனங்கள் பெற்றவர்கள்:
2014 - 2322; 2015 - 10982; 2016 - 9086; 2017 - 5638; 2018 - 4175; 2019 - 2968; 2020 - 2584; 2021 - 2983. 2015, 2016 இரண்டு ஆண்டுகளில் முன்னாள் இராணுவத்தினருக்கு வழங்கப் பட்டுள்ள வேலை வாய்ப்புகளின் எண்ணிக் கையோடு 2017 - 2021 ஐந்தாண்டுகளின் விவ ரங்களை ஒப்பிடும் போது பெரும் சரிவு இருக்கிறது. 2015 இல் 10 ஆயிரத்தை தாண்டி யிருந்த வேலை வாய்ப்புகள் 2019 - 2021 க்கு இடைப்பட்ட மூன்று ஆண்டுகளில் தலா 3 ஆயிரத்தைக் கூட கடக்கவில்லை. சில நேரம் எண்ணிக்கை கூட சரியான சித்தி ரத்தை தராது. ஆகவே அரசு நிர்ணயித்துள்ள இட ஒதுக்கீடு சதவீதம் எவ்வளவு நிரப்பப்பட்டுள்ளது என்று பார்த்தால் அந்த தகவல்கள் அதிர்ச்சியின் உச்சமாகஉள்ளன. இது 30.06.2021 இல் உள்ள நிலைமை. முன்னாள் இராணுவத்தினர் சதவீதம் இதுதான்.
- மத்திய சிவில் சேவைகள் & அஞ்சல் (CCS&P) குரூப் சி -1.39 சதவீதம், குரூப் டி - 2.77.
- மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் (CPSUs), குரூப் சி - 1.14 சதவீதம், குரூப் டி- 0.37 சதவீதம்.
- பொதுத் துறை வங்கிகள் (PSBs) குரூப் சி - 9.10, குரூப் - 21.34 சதவீதம்.
- மத்திய ஆயுதப் படை (CAPFs) குரூப் “ஏ”2.20
குரூப் “பி” 0.87; குரூப் “சி” 0.47; குரூப் “டி” 0.00 அரசு வங்கிகள் தவிர மற்ற இடங்களில் எல்லாம் அதிகபட்சம் 3 சதவீதத்தை தாண்டவே இல்லை. ஒரு சதவீதத்திற்கும் கீழே இருக்கிற இடங்கள் உள்ளன. ஜீரோ சதவீதம் கூட உள்ளது. ஏற்கெனவே உள்ள முன்னாள் இராணு வத்தினர் நிலைமையே இதுதான். மறு வேலை வாய்ப்பு இல்லை. வேலை கிடைத் தால் இருந்திருக்கக் கூடிய இராணுவப் பணி யின் கடைசி ஊதியம் புதிய பணி நியமனத் தில் பாதுகாக்கப்படுவது என்ற நடைமுறைக் கும் இடம் இல்லை. 20 ஆண்டு இராணுவப் பணி முடித்து வந்தவர்களின் நிகழ் கால கதியே இதுவெனில் நான்காண்டு ஒப்பந்த அக்னி வீரர்கள் எதிர்காலம்தான் என்ன? இவ்வாறு அதில் கேள்வி எழுப்பியுள்ளார்.