tamilnadu

img

கொரோனா பாதித்தவர்களுக்கு 20 ஆயிரம் மருந்துப் பெட்டகங்கள்..... தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சு.வெங்கடேசன் எம்.பி. வழங்கினார்....

மதுரை:
மதுரை மக்களவை உறுப்பினர்  சு.வெங்கடேசன் தமது தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒருகுறிப்பிட்ட தொகையை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக ஒதுக்கீடு செய்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில்  கொரோனா தடுப்புநடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன. இதனொரு பகுதியாக மதுரை மக்களவை உறுப்பினர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஒதுக்கீடு செய்வதாகவும் அதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கவேண்டுமெனவும் கூறியுள்ளார்.அதைத் தொடர்ந்து தமது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 20 ஆயிரம் பேருக்குகொரோனா எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கக் கூடிய மருந்து பெட்டகங்களை வழங்க முடிவு செய்துள்ளார். அதன் தொடக்க நிகழ்வு மதுரையில் ஞாயிறன்று மடீட்சியா அரங்கில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் தலைமையில் (மே 23) ஞாயிறன்று நடைபெற்ற நிகழ்வில் மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்கள், நகர் நலப் பணியாளர்கள், செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், காவல்துறையினருக்கு மருந்துப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன. மருந்துப் பெட்டகங்களை நிதி - மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர்  பழனிவேல் தியாகராஜன், வணிகவரி- பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பெ.மூர்த்தி, மக்களவை உறுப்பி
னர் சு.வெங்கடேசன், மாநகராட்சி தொழிலாளர் சங்கம் (சிஐடியு) பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பயனாளிகளுக்கு வழங்கினர். நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, வெங்கடேஷ், மு.பூமிநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரைமாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சு.வெங்கடேசன், மொத்தம் 20 ஆயிரம் மருந்துப்பெட்டகங்கள் வழங்கப்பட உள்ளது. இதில் மதுரை மாநகராட்சிப் பகுதிகளுக்கு 15 ஆயிரம்,மதுரை கிழக்கு, மேலூர் சட்டமன்றத் தொகுதி களுக்கு தலா ரூ.2,500 வழங்கப்பட உள்ளது.மதுரை மாநகராட்சி பகுதியில் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு கடந்த ஐந்து நாட்களில் வீட்டில் தனிமையில் இருப்பவர்கள் மற்றும் மாநகராட்சியின் முன்களப் பணியாளர்களான தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டஅனைத்து நகர்நலப் பணியாளர்களுக்கும் வழங்கப்படும்.இன்று (திங்கள்) முதல் நோய்த்தொற்றுஉறுதி செய்யப்பட்டு அரசு வகைப்படுத்துதல் மையத்திற்கு வந்து மருத்துவர் அறிவுறுத்த லின்படி வீட்டில் தனிமைப் பெறுபவர்களுக்கு வகைப்படுத்துதல் மையத்திலேயே மருந்துப் பெட்டகம் வழங்கப்படும். நோய்தொற்று கண்டறியப்பட்டு ஓரிரு நாளில் மருந்து பெட்டகம் கிடைக்கப்பெறவில்லையெனில் 7305024653, 7305024658 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றார். செய்தியாளர் சந்திப்பின்போது வாலிபர், மாணவர் சங்க நிர்வாகிகள் கார்த்திக், செல்வா, கோபிநாத், வேல்தேவா ஆகியோர் உடனிருந்தனர்.
நமது நிருபர்

;