tamilnadu

img

20 குடும்பங்கள் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தன

திருவாரூர், டிச.1- திருவாரூர் ஒன்றியம் புதுப்பத்தூர் கிராமத்தில் பிற கட்சியிலிருந்து விலகி 20-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பலர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டனர். கிராமக் கமிட்டி தலைவர் ஏ.பூமி நாதன், கிளைத்தலைவர் சிவராஜ் ஆகி யோர் தலைமையில் கட்சியில் இணை ந்தவர்களை சிபிஎம் மாநிலக்குழு உறு ப்பினர் ஐ.வி.நாகராஜன் வரவேற்றார்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல் கொடியேற்றினார். ஒன்றிய செயலாளர் என்.இடும்பையன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜி. பவுன்ராஜ், எஸ்.சேகர், பி.ஆர்.எஸ்.சுந்தரய்யா, ஜெ.வானதீபன், கிளைச் செயலாளர்கள் வி.கஜேந்திரன் (தப்பளாம்புலியூர்) கே.அமிர்தலிங்கம் (புதுப்பத்தூர்), மாதர் சங்க நிர்வாகி பி.வாசுகி, மூத்த உறுப்பினர் டி.கலிய பெருமாள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

குடவாசல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடவாசல் வடக்கு ஒன்றியம் ஆலத்தூர்  கிளை எண்ணக்குடி கிராமம் மேலத் தெருவில் 6 பேர் கட்சியின் ஆலத்தூர் கிளைச் செயலாளர் என்.செல்வராஜ் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சிக்கு கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் கே.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். புதிதாக அமைக்கப் பட்ட கொடிமரத்தில் செங்கொடியை சிபிஎம் மாவட்ட கவுன்சிலர் ஜெ.முக மது உதுமான் ஏற்றி வைத்து கட்சியில் இணைந்தவர்களுக்கு செந்துண்டு அணிவித்தார். வாலிபர் சங்கத்தின் வடக்கு ஒன்றிய தலைவர் என்.சிவா மற்றும் கட்சி கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
 

;