tamilnadu

சிசிலி ஜலசந்தி பகுதியில் 20 சடலங்கள் மீட்பு

துனிஸ், மார்ச் 20- துனிசியா நாட்டின் வடகிழக்கே நேபியுல் கடற்கரையோரம் சிசிலி ஜலசந்தியில் உள்ள கேப்பா னின் தீபகற்பப் பகுதியிலிருந்து பாதுகாப்பு வீரர்கள் சில உடல்களை கண்டெடுத்து உள்ளனர். இவர்கள் சஹாரா ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள். உடல் களை சோதனை செய்து பார்த்தபோது, சிலரிடம் சிரிய நாட்டின் பாஸ்போர்ட்டுகள் இருந்துள்ளன. போரால் பாதிக்கப்பட்டு உள்ள சிரியாவில் இருந்து லட்சக்கணக்கானோர் அகதிகளாக வெளி யேறி ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடை கின்றனர். இவர்கள் துனிசியா, துனிசியாவிற்கு அருகிலுள்ள நாடான லிபியாவின் கடல் வழியைப் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், துனிசியா நாட்டின் வானொலி நிலையம் ஷெம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், நேபியுல் கடலோரப் பகுதியில் பாதுகாப்பு அதி காரிகள் இதுவரை மொத்தம் 20 உடல்களை மீட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளது.  தொடர்ந்து காணாமல் போன அகதிகளை தேடும் பணி நடந்து வருகிறது. உயிரிழந்தவர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்கும் பணியும் நடந்து வருகிறது எனத் தெரிவித்துள்ளது.