சிவகங்கை, அக்.26- மானாமதுரை அருகே காணாமல் போன 2 இளை ஞர்கள் சடலமாக மீட்கப் பட்டனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கீழ கொம்புக்காரனேந்தல் பகுதியை சேர்ந்தவர்கள் ஜெயசூர்யா (18), செந் தூர்பாண்டி (18). இவர்கள் இருவரையும் காணவில்லை என்று அவர்களது பெற் றோர்கள் மானாமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறை யினர் இருவரையும் தேடி வந்த நிலையில், மாங்குளம் விலக்கு அருகே இளை ஞர்கள் இருவரும் பைக் சேத மடைந்த நிலையில் இறந்து கிடந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மானாமதுரை காவல்துறை யினர், இருவரின் உடலை யும் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து மனைக்கு பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்த னர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.