மதுரை:
தேனி அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் முருகன் (50), உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளமலைப்பட்டி இடையபட்டியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் விவித் (25) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் தொட்டப்பநாயக்கனூர் விலக்கு அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது தேனி மாவட்டம் கடமலைக்குண்டுவிற்கு சென்றுகொண்டிருந்த மினி வேன் ,இரு சக்கர வாகனத்தில் மோதியது.இதில் வாகனத்தில் சென்ற முருகன், விவித் ஆகியோர் பலியாகினர்.