சென்னை, அக்.9- தமிழ்நாடு சட்டப்பேரவையில் திங்க ளன்று (அக்.9) 2023-24 ஆம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகளை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு புதுப் பணிகள் மற்றும் புது துணை ப்பணிகள் குறித்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட இனங்க ளுக்கு சட்டமன்றப் பேரவையின் ஒப்புதல் பெறுவதும், எதிர்பாராச் செலவு நிதியிலி ருந்து விடுவிக்கப்பட்டுள்ள தொகையை அந்த நிதிக்கு ஈடு செய்வதும் துணை மானியக் கோரிக்கையின் நோக்கமாகும். அதன்படி, சட்டப்பேரவையில் 2023-24 ஆம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடு களை தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இத்துணை மதிப்பீடுகள், மொத்தம் 2,893.15 கோடி ரூபாய் நிதியை ஒதுக்குவதற்கு வழி வகை செய்கின்றன. மாநிலப் பேரிடர் தணிப்பு நிதியின் கீழ், சென்னைப் பெருநகர மாநக ராட்சி மற்றும் அதன் புறநகர் பகுதிகள் மற்றும் கடலூர் மாநகராட்சி ஆகியவற்றிற்கு மழை நீர் வடிகால் அமைக்க ரூ. 304 கோடி அரசு அனுமதித்துள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தி யாளர்கள் கூட்டமைப்பு மற்றும் திருச்சி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு பங்கு மூல தன உதவியாக ரூ. 175.33 கோடிஅரசு அனு மதித்துள்ளது. தென்காசி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகர் மற்றும் தூத்துக் குடி மாவட்டங்களில் உள்ள 25 வட்டாரங் களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 1,87,275 விவசாயிகளுக்கு இடுபொருள் மானிய நிவாரண உதவி வழங்குவதற்காக அரசு ரூ. 181,40 கோடி அனுமதித்துள்ளது. மாநில அரசின் அனைத்து போக்கு வரத்து நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் நிலுவைத் தொகையை வழங்குவதற்காக, மாநிலப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு வழிவகை முன்பணமாக ரூ. 171.05 கோடி அரசு அனுமதித்துள்ளது. அட்டல் நகர்ப்புற புத்துணர்வு மற்றும் நகர்ப்புற மாற்றங்களுக்கான இயக்கத்தின் கீழ் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக மாநில மற்றும் ஒன்றிய அரசின் பங்காக ரூ. 893.23 கோடி அரசு அனுமதித்துள்ளது. இதற்காக துணை மதிப்பீடுகளில் 150 கோடி ரூபாய் மானியக் கோரிக்கை எண்.34 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை என்பதன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. மீதத் தொகை மானியத்தில் ஏற்படும் சேமிப்பில் இருந்து மறுநிதியொதுக்கத்தின் மூலம் செல விடப்படும். 2013 ஆம் ஆண்டின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், மாநிலத்திற்குள் உணவு தானியங்களை கையாளுதல் மற்றும் விநியோகித்தல், நியாய விலைக் கடைகள் மற்றும் முகவர்களுக்கான லாபம் ஆகியவற்றிற்காக ஒன்றிய மற்றும் மாநில அரசின் பங்காக ரூ. 511.84 கோடி அரசு அனுமதித்துள்ளது. தொழில் 40 தரநிலையை எய்தும் நோக்கில் 45 அரசு பல்தொழில் நுட்பக் கல்லூரிகளை சீர்மிகு மையங்களாகத் தரம் உயர்த்துவதற்கு ரூ. 277.64 கோடியை அரசு அனுமதித்துள்ளது. அடையாறு நிதி மறுசீரமைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த 139.14 கோடி ரூபாய்க்கு அரசு கூடுதல் அனுமதி அளித் துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.