பாராட்டு!
2024 - 2025 ஆம் ஆண்டிற்கான 163 பக்கங்களை கொண்ட பட்ஜெட் உரையை காலை 10 மணிக்கு வாசிக்க தொடங்கிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, 12.07 மணிக்கு தமது உரையை நிறைவு செய்தார். முன்னதாக, இசை முழுங்க காலை 9.58 க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பேர வைக்குள் வந்தார். அவருடன் மூத்த அமைச்சர் துரைமுருகன் உடன் வந்தார். அப்போது, ஆளும் கட்சி, கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்வரிசை தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் மேசையை தட்டி வரவேற்றனர். காலை 10 மணிக்கு தனது உரையை தொடங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு பகல் 12 மணி 7 நிமிடங்களுக்கு நிறைவு செய்தார். தொடர்ந்து 2 மணி நேரம் 7 நிமிடங்கள் வாசித்தார். முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி, துணைத் தலைவர் ஆர்.பி. உதய குமார், எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோரும் நிதி அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
வாழ்த்து!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலை வராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் செல்வப்பெருந்தகைக்கு சட்டப்பேர வையில் அமைச்சர்கள், ஆளும் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி உறுப் பினர்களும் வாழ்த்து தெரிவித்தனர். சிபிஎம் சார்பில் சட்டமன்ற குழுத்தலை வர் நாகை மாலி, எம். சின்னத்துரை, எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி. வேலுமணி, முன்வரிசை தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
நலம் விசாரிப்பு!
கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுத் தலை வருமான நாகை மாலி உடல் நலக் குறைவால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சில நாட்கள் ஓய்வில் இருந்தார். இந்த நிலையில், பிப்.19 அன்று சட்டப்பேரவைக்கு வந்தார். அவரை முதலமைச்சர், மூத்த அமைச் சர்கள் மற்றும் சட்டமன்ற கட்சித் தலை வர்கள் பலரும் நலம் விசாரித்தனர்.
ஆப்சென்ட்
பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வின் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் செயல் பட்டு வந்தார். இரட்டை தலைமை மோதல் காரணமாக கட்சி பதவி உட்பட அனைத்தும் பறிக்கப்பட்டது. இந்த நிலையில், அவரது இருக்கை யை மாற்றி ஆர்.பி. உதயகுமாருக்கு துணைத் தலைவர் இருக்கையை ஒதுக்க கோரி வந்தனர். சில தினங்களுக்கு முன்பு எதிர்க்கட்சி தலை வர் பழனிசாமியின் இருக்கைக்கு பின்னால் 2-வது வரிசையில், முதல் சீட் ஓபிஎஸ்ஸுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் பன்னீர்செல்வம் இன்னமும் பேரவைக்கு வரவில்லை. காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கொறடா விஜயதாரணி பாஜகவில் சேரு வதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்த நிலையில் அவரும் சட்டப்பேரவைக்கு வரவில்லை.