தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 15 ஆவது மாநில மாநாடு தூத்துக்குடியில் நடைபெற்றது. மாநாட்டை துவக்கி வைத்து ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி உரையாற்றினார். சங்கத்தின் மாநில தலைவர் சுந்தரம்மாள், மாநில பொதுச் செயலாளர் அ.நூர்ஜகான், மாநில பொருளாளர் பேயத்தேவன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு.அன்பரசு, பொதுச் செயலாளர் ஆ.செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.