tamilnadu

img

ஆன்லைன் ரம்மியில் ரூ.15 லட்சம் இழந்த வாலிபர் தற்கொலை

திருநெல்வேலி,ஜன. 11- ஆன்லைன் ரம்மி சூதாட்டத் திற்கு மேலும் ஒருவர் பலியாகி யுள்ளார். இத்துடன் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக அதி கரித்துள்ளது.  ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழக அரசால் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காதது இத்தகைய மரணங்களுக்கு இட்டுச் செல்கிறது. நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ஸ்ரீரெகுநாதபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர்.  கூலி தொழிலாளி. இவரது மகன் சிவன்ராஜ் (34). பட்டதாரி. இவர் கடந்த சில  மாதங்களுக்கு முன்பு தனது செல்போனில் ஆன்லைன் ரம்மி என்ற தளத்தை பதி விறக்கம் செய்து விளையாட தொடங்கினார். அவ்வப்போது ஆன்லைன் ரம்மி விளை யாட்டில் விளையாடி சிறு சிறு தொகையை வென்று வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு  ஒரு பெரிய தொகையை வைத்து விளை யாடியதாக கூறப்படுகிறது.

அதில் சிவன் ராஜ் தன்னுடைய மொத்த தொகை யும் இழந்துள்ளதாக தெரிகிறது. பின்னர் ஆன்லைன் ரம்மி விளை யாட்டில் தான் விட்ட பணத்தை எப்படி யாவது வென்று விட வேண்டும் என்று தனது நண்பர்கள் மற்றும் உற வினர்களிடம் கடன் வாங்கி விளை யாடியதாக தெரிகிறது.அதிலும் தோல்வியுற்று தான் கடன் வாங்கிய பணத்தையும் இழந்துள்ளார். அதன்படி மொத்தம் ரூ.15 லட்சம் இழந்ததாக கூறப்படுகிறது.  இதனால் செவ்வாய்க்கிழமை மன முடைந்து தனது ஊரின் அருகே உள்ள தோட்டத்திற்கு சென்று பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கி அதில் குளிர்பானம் கலந்து  குடித்தார். பின்னர் மயங்கிய நிலையில் இருந்த சிவன்ராஜ்ஜை அக்கம், பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.