tamilnadu

img

8 ஆண்டுகளுக்கு பிறகு நீக்கப்பட்ட 144 தடை

கள்ளக்குறிச்சி, ஆக.16- கள்ளக்குறிச்சி மாவட்டம், சேஷசமுத்திரம் கிராமத்தில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 144 தடை உத்தரவு நீக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள  சேஷசமுத்திரம் என்ற கிராமத்தில் 2015 ஆகஸ்ட் 15 அன்று கோவில் தேர் ஊர்வலம் தொடர்பான தகராறில் 500 ஆதிக்க சாதியினர் பட்டியல் சமூக மக்களின் குடி யிருப்புகளையும் தாக்கினர். இதையடுத்து அன்று நடக்க இருந்த தேர் திருவிழாவின் போது ஏற்பட்ட வன்முறையின் போது 15 பட்டியலின மக்களின் வீடுகள் எரிக்கப்பட்டன மற்றும் 40 பேர் காயமடைந்தனர். இந்த வன்முறையின் எதிரொ லியாக இக்கிராமத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அக்கிராமத்தில் கூட்டம் கூடுவது, பொது நிகழ்ச்சி நடத்து வது இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி  மாவட்ட ஆட்சியர் முயற்சியால் 144 தடை உத்தரவு பிறப்பிக் கப்பட்ட அதே நாளான ஆகஸ்ட்  15 அன்று  மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த கிராம  சபை கூட்டத்தில்  144 தடை உத்தரவு  நீக்கப்பட்டது,    சுமார் 8 ஆண்டுகளாக எந்தவித பொது நிகழ்ச்சி நடக்காமல் இருந்த  நிலையில் ஆட்சியரின் முயற்சியால் மீண்டும் தேர் திரு விழா நடத்தப்படும் என உறுதி யளித்து சென்றார்.மேலும் ஆட்சியர் ஷ்ரவன் குமார் கூறுகை யில், சாதி, மத, இனம் பாராமல்  மக்கள் அனைவரும் சமம் என்றும் சகோதரத்துடன் - ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் எனவும் நாம் ஒற்றுமை பேணி காப்ப தால் மட்டும் கிராமம் வளர்ச்சி பெறும் எனவும் தெரிவித்தார். அரசும், அரசு அதிகாரிகளும் மக்களுக்கானவர்கள் என்பதை உணர்ந்து வன்முறைகளை கையாளக் கூடாது என அவர் கேட்டுக்  கொண்டார். மாவட்ட ஆட்சியரின் இந்த முயற்சியால் அக்கிராம மக்கள்  அவருக்கு நன்றி தெரிவித்தனர்.