சிவகங்கை, ஜன.5- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவ லகக் கூட்டரங்கில், இந்திய தேர்தல் ஆணை யம் அறிவுரைப்படி 01.01.2023-ஐ தகுதி நாளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வாக்கா ளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத் தம் இறுதி வாக்காளர் பட்டியலினை, அங்கீ கரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி ஜனவரி 5 அன்று வாக் காளர் பட்டியலை வெளியிட்டார். பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரைப் படி, ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் வாக் குச்சாவடி மையம் விரிவுபடுத்துதல் தொடர் பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு அங்கீ கரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரமுகர் களின் ஆலோசனை மற்றும் பொதுமக்க ளின் ஆலோசனை பெற்று அதனடிப்படை யில் இந்திய தேர்தல் ஆணையம் வழிகாட்டு தலின்படி திட்டப்பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. அந்தவகையில், இன்று 1.1.2023-ஐ தகுதிநாளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிடப்படுகின்றன.
அதன்படி, காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் 1,53,228 ஆண் வாக்காளர் களும், 1,58,417 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 45 வாக்காளர்களும் என 3,11,690 வாக்காளர்களும், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 1,43,106 ஆண் வாக்காளர்களும், 1,49,101 பெண் வாக்கா ளர்களும், மற்றவர்கள் 03 வாக்காளர்களும் என 2,92,210 வாக்காளர்களும், சிவ கங்கை சட்டமன்றத் தொகுதியில் 1,45,005 ஆண் வாக்காளர்களும், 1,50,170 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 06 வாக்கா ளர்களும் என 2,95,181 வாக்காளர்களும், மானாமதுரை (தனி) சட்டமன்றத் தொகு தியில் 1,36,404 ஆண் வாக்காளர்களும், 1,40,785 பெண் வாக்காளர்களும், மற்ற வர்கள் 1 வாக்காளரும் என 2,77,190 வாக்கா ளர்களும் என மொத்தம் நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் சேர்த்து 5,77,743 ஆண் வாக்காளர்களும், 5,98,473 பெண் வாக்கா ளர்களும், மற்றவர்கள் 55 வாக்கா ளர்களும் என ஆக மொத்தம் 11,76,271 வாக் காளர்களும், மேலும், 1,730 பணி வாக்கா ளர்களும் உள்ளார்கள் என்று தெரி வித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலு வலர் ப.மணிவண்ணன் மற்றும் திமுக மாவட்ட துணைச் செயலாளரும், திருப்பு வனம் பேரூராட்சிதலைவருமான சேங்கை மாறன், திமுக மாவட்ட துணைச் செயலா ளரும் காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத் தலைவருமான மணிமுத்து, திமுக நகர் செயலாளரும், சிவகங்கை நகர்மன்றத் தலைவருமான துரைஆனந்த்,அதிமுக நகர் செயலாளரும் சிவகங்கை நகர்மன்ற உறுப்பினருமான ராஜா,பரோஸ்காந்தி, திமுக இளைஞரணி செயலாளரும் நகர் மன்ற உறுப்பினருமான அயூப்கான் ஆகி யோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.