tamilnadu

img

அவினாசி சுகாதாரப் பணியாளர் பரிமளா தற்கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு சிறை

திருப்பூர், ஆக.7- கந்து வட்டிக்கொடுமை - சாதிய இழிவு படுத்தல் கார ணமாக அவினாசி சுகாதா ரப் பணியாளர் பரிமளா தற்  கொலை செய்து கொண்ட  வழக்கில் குற்றவாளி களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்றுள்ளது.  திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே ராயம் பாளையம் பகுதியைச் சேர்ந்த சந்திரன் மனைவி பரி மளா (30), அவினாசி பேரூ ராட்சியில் ஒப்பந்த சுகாதார ஊழியராகப் பணியாற்றி வந்தார். பனியன் கூலித் தொழிலாளியான சந்திரன், அதேபகுதியைச் சேர்ந்த தன சேகரிடம் 27 ஆயிரம் ரூபாய்  கந்துவட்டிக்கு கடன் வாங்கி யுள்ளார். வாரந்தோறும் கந்துவட்டி அடிப்படையில் 4 மாதத்தில் வட்டியும், அசலுமாக பத்தாயிரம் ரூபா யைத் திருப்பிக் கொடுத்துள்  ளார். மீதித் தொகை பதினே ழாயிரத்தை உடனடியாகத் தர வலியுறுத்தி, சாதியைச்  சொல்லி தகாத வார்த்தை களால் திட்டி, சில நாட்களா கத் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர்.  இதன் உச்சகட்டமாக 23.5.22  அன்று தனசேகர னும், அவனது தாயார் பூவாத்  தாள் (எ)  துளசிமணியும் சந்  திரன் வீட்டில் இல்லாத நேரத்தில், குழந்தைகளுடன் வீட்டிலிருந்த பரிமளாவை, தெருவில் அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்  டிருக்க சாதிப்பெயரைச் சொல்லி இழிவுபடுத்தியும், தகாத வார்த்தைகளால் திட்டி யும் கொலை மிரட்டல் விடுத்  துள்ளனர். இதனால், மிகுந்த மனவேதனையடைந்த பரி மளா, குழந்தைகளை வெளி யில் அனுப்பிவிட்டு, வீட்டுக்  குள் சென்று, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்  டுள்ளார்.

இதனையடுத்து, அவி னாசி காவல் நிலையத்தில் சந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு ( வழக்கு எண் 267 / 2022 நாள் : 24.03.22) செய்  யப்பட்டுள்ளது. பரிமளா வின் உயிரிழப்புக்குக் காரண மான தனசேகரன், துளசி மணி ஆகியோரை வன் கொடுமைத் தடுப்புச் சட்டத் திலும், கந்துவட்டித் தடைச் சட்டத்திலும் கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி, ஆதித்தமிழர் பேரவை  உள்ளிட்ட பல்வேறு அமைப்  பினரும் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதன்தொடர்ச்சி யாக, 2022 மே 24 ஆம் தேதி புதுக்கோட்டையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அர சுக்கு அழுத்தம் கொடுக்கப் பட்டது. இவ்வழக்கு, திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 17.7.23 அன்று  மாவட்ட  முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ணம் ஜே. நட ராஜன், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கினார். குற்றவாளிகள் தனசேக ரன், அவனது தாயார் பூவாத் தாள் (எ) துளசிமணி ஆகி யோருக்கு தலா 10 ஆண்டு கள் சிறை தண்டனையும், தலா 4 ஆயிரம் தண்டத் தொகையும் விதித்து தீர்ப்ப ளிக்கப்பட்டது. இவ்வழக்கு 15 மாதங்களில் விசாரணை  நடத்தி, தீர்ப்பு வழங்கப்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.  இவ்வழக்கில்  சிறப்பா கப் பணியாற்றிய அரசு சிறப்பு வழக்கறிஞர் மனோ கரனுக்கும், களத்தில் துணை நின்ற அம்பேத்கரிய, பெரி யாரிய, மார்க்சிய அமைப்பு களுக்கும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, திருப்பூர்  மாவட்டக்குழு சார்பில் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரி வித்துள்ளது.