மதுரை, ஆக.27-
ரயில்வே பாதுகாப்புப்பிரிவில் சுமார் 10 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளதே மதுரை ரயில் நிலைய தீ விபத்திற்கு காரணம் என்று மதுரை நாடா ளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரையில் விபத்துக்குள்ளான ரயிலை தென்மண்டல ரயில்வே பாது காப்பு ஆணையர் செளத்ரி, மதுரை கோட்ட மேலாளர் ஆனந்த் உள்ளிட்ட அதிகாரி களுடன் மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசன் ஞாயிறன்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் சு.வெங்கடேசன் எம்.பி., செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘சனிக் கிழமை அன்று நடைபெற்ற ரயில் விபத்து சம்பவம் மிகவும் வேதனை அளிக்கக் கூடியதாக உள்ளது. மீட்பு பணிகளை ரயில்வே நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வா கம் இணைந்து செய்துள்ளது என்றார்.
ரயிலில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது என்ற விதிமுறைகள் உள்ளதே என்ற கேள்விக்கு, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் எதுவும் ரயிலில் எடுத்துச் செல்லக்கூடாது, குறிப்பாக ஒரு இருசக்கர வாகனத்தை ரயிலில் கொண்டு செல்ல வேண்டும் என்றால் கூட அதில் பெட்ரோல் இருக்கிறதா? இல்லையா? என்பதை பார்த்த பின்னரே அனுமதிக்கப்படும்.
விபத்து நடந்த ரயிலில் இரண்டு எரி வாயு உருளைகள், மண்ணெண்ணெய் அடுப்பு மண்ணெண்ணெய், விறகு போன்றவை கொண்டு வந்துள்ளார்கள். மண்ணெண்ணெய் வெளி மார்க்கெட்டில் கிடைப்பது மிகவும் கடினம். இது போன்ற நேரத்தில் இவர்கள் எப்படி இவ்வளவு மண்ணெண்ணெய்யை சேகரித்துக் கொண்டு வந்தனர்.
இந்தியாவின் பாதி எல்லையில் இருந்து ரயில் புறப்பட்டு கடைசி நாகர் கோயில் ரயில் நிலையம் வரை சென்று திரும்பி உள்ளது. இவற்றில் ரயில் நிலையங்களிலும் இந்த ரயில் பெட்டியை சோதனை செய்யவில்லையா என்று கேள்வி எழுப்பினார்.
இது ரயில்வே பாதுகாப்புப் படையின் தோல்வியே ஆகும். ரயில்வே பாதுகாப்பு பிரிவில் சுமார் 10 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த குறைபாடு களும் இதற்கு ஒரு காரணமாக உள்ளது. எனவே இதற்கான கேள்வியினை நான் கண்டிப்பாக நாடாளுமன்றத்தில் எழுப்புவேன்” என்று சு.வெங்கடேசன் கூறினார்.
மேலும், தீயணைப்பு பாதுகாப்பு உபகர ணங்கள் குளிர்சாதன பெட்டியில் மட்டும் அல்லாமல் இரண்டாம், மூன்றாம் மற்றும் சுற்றுலா பயணிகள் பெட்டிகளிலும் இருக்க வேண்டும். அதேபோல், 2021- 22 ஆம் ஆண்டுகளில் நான்கு விபத்துகள் தான் நடந்துள்ளன என்று ரயில்வே துறை அமைச்சர் கூறியுள்ளார். எனவே விபத்து நடந்தவுடன் கணக்குச் சொல்வது அல்ல, விபத்து நடக்காமல் தவிர்ப்பது தான் அரசின் கடமை என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, ஆய்வின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட் டச் செயற்குழு உறுப்பினர் ஜா.நரசிம்மன் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.