சென்னை,பிப்.12- தமிழ்நாட்டில் நடப்பு நிதியாண்டில், காற்றாலைகள் மூலம் 10 விழுக்காடு கூடுதலாக மின் உற்பத்தி நடைபெற்றுள்ளது. தமிழகத்துக்கான மின்சார தேவையை அனல், நீர், காற்று மற்றும் அணு மின்சாரம் பூர்த்தி செய்கின்றன. காற்றாலைகள் மூலம் சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத மின்சா ரம் கிடைக்கிறது. இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது. மாநிலத்தின் மின்சார தேவையை நிவர்த்தி செய்வதில் காற்றாலைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. 9,500 மெகா வாட் மின் உற்பத்திக்கான கட்டமைப்பு உள்ளது. சூரிய ஒளியைப் பயன்படுத்தும் சோலார் மின் உற்பத்தியைப் பொறுத்தவரை சுமார் 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்திக் கான கட்டமைப்பு உள்ளது. தமிழகத்தில் கோவை, திருப்பூர், கரூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக் குடி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்க ளில் அதிக காற்றாலைகள் உள்ளன. மொத்த மாக தமிழகத்தில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காற்றாடிகள் உள்ளன. இவை சுமார் 9,500 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டவை. வழக்கமாக, மே மாதம் முதல் செப்டம்பர் வரை காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், அந்த மாதங்களில் அதிகளவு காற்றாலை மின்சாரம் உற்பத்தியாகும். சில நேரங்களில் தேவைக்கு அதிகமாகவே மின் உற்பத்தி நடைபெறும். ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை மின் கணக்கீடு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அந்த வகையில் கடந்தாண்டில் காற்றாலைகள் மூலம் 10 ஆயிரத்து 800 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தியாகி உள்ளது. நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை 10 விழுக்காடு கூடுதலாகவே மின் உற்பத்தி நடைபெற்றுள்ளது.