tamilnadu

img

வருசநாடு அருகே மலையில் பற்றியெரியும் தீ 10 ஏக்கரில் மரம், செடிகள் நாசம்

கடமலைக்குண்டு, மார்ச்7- தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, கண்டம னூர் வனச்சரகம், தர்மராஜபுரம் அருகே உள்ள சூரங்  கொட்டம் மலைப்பகுதியில் மர்மநபர்கள் சிலர் தீவைத்த னர்.  இதுகுறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையின ருக்கு தகவல் கொடுத்தனர். தீயை அணைக்க தீய ணைப்புத்துறையினர் பெரும் முயற்சி எடுத்தும் தீ எரிந்த  பகுதிக்குள் தீயணைப்பு வாகனத்தை கொண்டு செல்ல முடியவில்லை. இதனால்  ஒருமணிநேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட தீயணைப்புத்துறையினர் திரும்  பிச்சென்றனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் கண்ட மனூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறை பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.  இந்த தீவிபத்தால் மலையில் 10 ஏக்கர் பரப்பளவில் மரம் செடிகள் கருகி நாசமானது. மேலும் மலைப்பகுதிக்கு தீ  வைத்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்ற னர். இதேபோல வருசநாடு அருகே உள்ள பஞ்சந்தாங்கி மலைப்பகுதியிலும் தீப்பற்றி எரிந்து வருகிறது. பஞ்சந்  தாங்கி மலையில் கடந்த 10 நாட்களில் இது 4 ஆவது முறையாக தீ எரிந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.