tamilnadu

img

பொங்கலுக்கு அரசு பேருந்துகளில் ஒரே நாளில் 1.15 லட்சம் பேர்பயணம்

சென்னை,ஜன.12- பொங்கல் பண்டிகையை கொண்டாட வெளியூர் செல்லும் பொதுமக்கள் வசதிக்காக சென்னை யில் இருந்து ஜன.11 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 6  நிலையங்களில் இருந்து 2,520  பேருந்துகள் இயக்க திட்டமிடப்ப ட்டிருந்தது. ஆனால் அதைவிட கூடுத லாக பேருந்துகள் இயக்கப்பட்டன. நள்ளிரவு 12 மணி நிலவரப்படி வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகள் மற்றும் 663 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 2,763 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் 1,14,665 பயணிகள் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. மேலும் 75,476  பேர் பயணத்துக்காக முன் பதிவு செய் துள்ளனர். தற்போது இரவு ஊரடங்கு அமலில்  இருப்பதால் இரவு 10 மணிக்கு மேல் பயணம் செய்யக்கூடியவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிக ளில் இருந்து பேருந்து நிலையங்க ளுக்கு செல்வதற்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருப்பதால் பெரும்பாலானவர்கள் இரவு 10 மணிக்கு முன்னதாகவே பஸ் நிலையங்களுக்கு சென்றடைகிறார்கள். பொதுவாக பகல்  நேரத்தில் பயணம் செய்ய பொது மக்கள் தயங்குவார்கள் ஆனால் தற்போது இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதால் இரவுநேர பயணத்தை தவிர்த்து பகல் நேர பயணத்தை விரும்புகிறார்கள். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பகல் நேரத்தில் கூட்டம் அலை மோதுகிறது.