சென்னை மீனம்பாக்கத்தில் பழைய விமான நிலையம் அகற்றப்பட்டு ரூ.1,260 கோடி மதிப்பில் 1.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் ஆளுநர் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிரதித்ய சிந்தியா, தகவல் ஒலிப்பரப்புத்துறை இணைஅமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர். பின்னர், இவர்களுடன் பிரதமர் புதிய முனைய மாதிரியை பார்வையிட்டார்.