tamilnadu

img

1,074 கிலோ தங்க கட்டிகள் வங்கியில் முதலீடு

1,074 கிலோ தங்க கட்டிகள் வங்கியில் முதலீடு

இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 21 திருக்கோவில்களின் மூலம் கிடைக்கப் பெற்ற 1,074 கிலோ 123 கிராம் 488 மில்லிகிராம் சுத்தத் தங்கக் கட்டிகளை தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான பத்திரங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜு மற்றும் ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நீதியரசர்கள் ரவிச்சந்திர பாபு, ஆர்.மாலா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  க.மணிவாசன், துறையின் ஆணையர் பி.என்.ஸ்ரீதர், பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளர் ஜோபி ஜோஸ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.