tamilnadu

img

‘கேரளம் மினி பாகிஸ்தான்’ பாஜக அமைச்சரின் அறிக்கை மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது: முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம், ஜன. 1- கேரளாவை மினி பாகிஸ்தான் என்று விமர்சித்த மகாராஷ்டிர பாஜக அமைச்சர் நிதேஷ் ரானேவின் கருத்து மிகவும் ஆத்திரமூட்டும் வகையில் உள்ளது, கண்டிக்கத்தக்கது என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.  சங்பரிவார்களின் கேரளம் தொடர்பான  அணுகுமுறையே  மகாராஷ்டிர அமைச்சரின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது. தங்களது செல்வாக்கை உறுதிப்படுத்த சிரமப்படும் பகுதிகளை அவதூறு செய்தும் வெறுப்பு பிரச்சாரம் நடத்தியும் தனிமைப்படுத்திவிடலாம் என சங்பரிவார் கருதுகிறது. அதை பின்பற்றி இத்தகு அறிவிப்புகள் வருகின்றன. வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிடும் அமைச்சர் ஒருவருக்கு அந்த பதவியில் நீடிக்க தகுதியில்லை. நாட்டின் அரசமைப்புக்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ஒருவர் அந்த பதவியில் நீடிக்க தகுதியற்றவர். நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் வகையில் கடுமையான சத்தியப்பிரமாண மீறலைச் செய்த அமைச்சரின் செயல் திகைப்பூட்டியது. இதற்கு அந்த கட்சித் தலைமை பதில் அளிக்காதது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது என முதல்வர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.