tamilnadu

img

முனைவர் பு.அன்பழகன் எழுதி, பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள ‘இந்திய அரசியல் பொருளாதாரம்

முனைவர் பு.அன்பழகன் எழுதி, பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள ‘இந்திய அரசியல் பொருளாதாரமும், இறையாண்மையும்’ எனும் நூல் வெளியீட்டு விழா புதனன்று (ஆக.16) மாநிலக் கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் இரா.ராமன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாநில திட்டக்குழு மேனாள் தலைவர் மு.நாகநாதன் நூலை வெளியிட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன் பெற்றுக் கொண்டார். நூலாசிரியர் முனைவர் பு.அன்பழகன், மாநிலக்கல்லூரி பொருளாதாரத்துறை தலைவர் முனைவர் ச.ஜெயராமன், பாரதி புத்தகாலயம் பதிப்பாளர் க.நாகராஜன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.