tamilnadu

img

வெளிநாட்டில் சிக்கித் தவித்த 572 இந்தியர்கள் நாடு திரும்பினர் மும்பை ஹோட்டல்களில் கட்டாயத் தனிமை

மும்பை, மே 10- நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 572 இந்தியர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நாடு திரும்பினர். அவர்கள் உடனடியாக இதற்கென ஏற்பாடு செய்யப்பட்ட பிரத்யேக ஹோட்டல்களில் கட்டாயத் தனிமையில் வைக்க அழைத்துச்செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மகாராஷ்டிரா அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாடுதழுவிய ஊரடங்கு காரணமாக வெளிநாட்டில் சிக்கித் தவித்த சுமார் 572 இந்தியர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். லண்டனில் இருந்து ஒரு விமானம், சிங்கப்பூரிலிருந்து மற்றொரு விமானம் ஆகிய இரு விமானங்கள் மூலமும் இவர்கள் ஞாயிறு காலை மும்பை  வந்தடைந்தனர். விமானத்திலிருந்து இறங்கியதும் அவர்கள் பரிசோதனை செய்யப்பட்டனர்.

பின்னர் மத்திய அரசின் வழிகாட்டுதல் களின்படி தனிமையில் வைக்க அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் கட்டாய சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள், மேலும் அரசு தங்குமிடத்தில் தனிமைப் படுத்தப்படுவார்கள். ஞாயிற்றுக்கிழமை வந்த பயணிகளில், அதிகபட்சம் மும்பையைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் சிலர் மகாராஷ்டிரா நகரங் களான புனே, துலே, கோலாப்பூர் பகுதி களைச் சேர்ந்தவர்கள். பிற நகரங்களைச் சேர்ந்த பயணிகள் அரசு ஏற்பாடு செய்திருந்த பேருந்துகளில் அனுப்பிவைக்கப்பட்டனர்.  அவர்களில் மும்பையைச் சேர்ந்தவர்கள் மட்டும் அருகிலுள்ள ஹோட்டல்களில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அருகிலுள்ள மற்ற நகரங்களைச் சேர்ந்தவர்கள் அவரவர் சொந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லப் பட்டனர், அங்கு அவர்கள் அங்குள்ள ஹோட்டல்களில் அதேபோன்ற கட்டாயத் தனிமையில் வைக்கப்படுவார்கள் . நாடு திரும்பியவர்களில் யாருக்காவது  கொரோனா ‘பாஸிட்டிவ்’ என கண்டறியப் பட்டால் அவர்கள் உடனே கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்ட உள்ளூர் மருத்துவமனைக்கு மாற்றப்படுவார்கள்.  இது தவிர, மணிலாவில் (பிலிப்பைன்ஸ்) இருந்து 241 பயணிகளை அழைத்துவரும் விமானம் ஞாயிற்றுக்கிழமை இரவு மும்பை வந்துசேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தி டைம்ஸ் ஆப் இந்தியா இணையதளத்திலிருந்து