மகாராஷ்டிரா அரியானா ஆகிய மாநிலங்களில் இன்று காலை துவங்கி சட்ட மன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களின் சட்டசபை தேர்தலுடன் நாடு முழுவதும் தமிழ்நாடு (2), உத்தரபிரதேசம் (11), குஜராத் (6), கேரளா (5), பீகார் (5), அசாம் (4), பஞ்சாப் (4), சிக்கிம் (3), ராஜஸ்தான் (2), இமாச்சல்பிரதேசம் (2), புதுச்சேரி, தெலுங்கானா, மத்தியபிரதேசம், மேகாலயா, ஒடிசா, அருணாசலப்பிரதேசம், சத்தீஷ்கார் (தலா ஒரு தொகுதி) ஆகிய மாநிலங்களில் உள்ள 51 சட்டசபை தொகுதிகளுக்கும், மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா நாடாளுமன்ற தொகுதிக்கும், பீகார் மாநிலம் சமஸ்திபூர் நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் 24ந்தேதி எண்ணப்படும்.
மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளிலும், அரியானாவில் உள்ள 90 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று சட்ட மன்றத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு இன்று 7 மணிக்கு காலை துவங்கி நடைபெற்று வருகிறது.