tamilnadu

img

மகாராஷ்டிராவில் மீட்பு படகு கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி


மகாராஷ்டிர மாநிலத்தில் மீட்பு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களின் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பல பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 1.32 லட்சம் மக்கள் பாதுகாப்பான தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் மழை பாதிப்புகளால் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். 
இந்நிலையின் மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் கிருஷ்ணா நதியோரம் வெள்ளம் சூழ்ந்த பகுதியில்  மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த 9 பேர் சடலமான மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.