tamilnadu

img

தொடரும் சிவசேனா - பாஜக மோதல்

இன்று மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்


மும்பை,அக்.20-  மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் 21 திங்களன்று நடைபெறுகிறது. இதில் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் பாஜக-சிவசேனாவுக்கும் இடையிலான மோதல் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் வரை தொடர்ந்து நடந்தது. சிவசேனாவின் அதிகாரபூர்வ ஏடான சாம்னாவில், சிவசேனாவின் முக்கிய தலைவரான சஞ்சய் ரவூத் எழுதியுள்ள  கட்டுரையில், மகாராஷ்டிராவின் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தேர்தல் பிரச்சாரங்களில் எல்லாம், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை’ என்று பேசினார். அப்படி பாஜக அரசுக்கு எதிரிகளே இல்லாத ஒரு மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலுக்காக பிரதமர் மோடி எதற்காக பத்து முறை பேரணி நடத்த வேண்டும்? பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா எதற்காக முப்பது முறை வந்து பேரணி நடத்த வேண்டும்? எதிரிகளே இல்லாத மாநிலத்தில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நூற்றுக்கணக்கான முறை ஏன் பேரணி நடத்த வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் . 

இதே கேள்வியை தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரும் எழுப்பியுள்ளார். அதையும் குறிப்பிட்டுள்ள ரவூத், ‘சரத்பவார் எழுப்பியது சரியான வினா’ என்று கூறியுள்ளார். கூட்டணி அமைவதற்கு முன்னே சிவசேனாவுக்கும் பாஜகவுக்கும் மோதல் ஏற்பட்டது. மத்திய மோடி அரசின் நடவடிக்கையால் அவதிப்பட்டுள்ள மகாராஷ்டிரா மாநில மக்கள் பாஜக அரசுக்கு எதிராக உள்ளனர். இதையறிந்து கூட்டணி அமைத்துக்கொண்டனர். ஆனால் தேர்தல் பணிகளில் துவக்கம் முதல் பிரச்சாரம் முடியும் வரை மோதல் முடியவில்லை.