tamilnadu

img

மீண்டும் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம்.. மகாராஷ்டிரத்தில் ஓட்டுநர் மீது தாக்குதல்

மும்பை:
‘ஜெய் ஸ்ரீராம்’ கூறுமாறு, கடந்த 10 நாட்களுக்குள், 2 மதரசாஆசிரியர்கள் உட்பட 3 இஸ்லாமியர்கள், இந்துத்துவா வெறிக்கும்பலால் தாக்கப்பட்டனர்.இச்சம்பவங்களில், தில்லியைச் சேர்ந்த மதரசா ஆசிரியர்முகம்மது மோமின், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மதரசா ஆசிரியர் ஹபீஸ் முகம்மது ஷாரூக் ஹால்தர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். ஜார்க்கண்ட்டில் மின்கம்பத்தில் கட்டிவைத்து 7 மணிநேர மாக தாக்கப்பட்ட, ஷாம்ஸ் தப்ரிஸ் இறந்தே போனார். இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்திலும், முஸ்லிம் ஓட்டுநர் ஒருவர் மீது வெறிக்கும்பல் தற்போது தாக்குதல் நடத்தியுள்ளது. பைசல் என்ற அந்த வாகன ஓட்டுநர் சனிக்கிழமை இரவு திவா நகரத்திற்கு சில பயணிகளை அழைத்துச் சென்றுள்ளார். திரும்பி வரும்போது, ஓட்டுநர் பைசல் ஒரு முஸ்லிம் என்பதை அறிந்ததும், ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லச் சொல்லி 5 பேர் அவரைத் தாக்கியுள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக, தாக்குதலில் ஈடுபட்ட 3 பேர் மீது, ஐபிசி பிரிவு 295 (மத உணர்வுகளை புண்படுத்தும்) மற்றும் 392 (கொள்ளை) ஆகியவற்றின் கீழ் மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.

;