tamilnadu

img

கொரோனா தொற்றிலிருந்து மீள உதவும் பேவிபிராவிர் - ஆய்வில் தகவல்


கொரோனா தொற்றில் இருந்து மீள பேவிபிராவிர் மாத்திரை உதவும் என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
பேவிபிராவிர் மாத்திரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுப்பது குறித்து  இந்தியாவில் 7 முக்கிய இடங்களில் 3கட்ட மருத்துவ பரிசோதனை  நடத்திய,  கிளென்மார்க் நிறுவனத்தார்  முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது
குறிப்பாக, இந்த மாத்திரைகள் லேசான பாதிப்பு முதல் மிதமான பாதிப்பு வரை உள்ள கொரோனா நோயாளிகளுக்கு நல்ல பலனை அளிப்பதாக தெரிய வந்திருக்கிறது என அந்த நிறுவனத்தார் கூறுகின்றனர். 150 நோயாளிகளுக்கு தந்து மாத்திரைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ பரிசோதனையின்போது, வழக்கமான ஆதரவு பராமரிப்புடன் 14 நாட்கள் வரையில் பேவிபிராவிர் மாத்திரைகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த மூன்றாம் கட்ட சோதனையில் முதன்மை செயல்திறன் முடிவு, மேம்பாடுகளை காட்டி இருக்கிறது. மேலும் இந்த மாத்திரைகள் எந்தவொரு மோசமான பாதகமான விளைவுகளையோ, மரணத்தையோ ஏற்படுத்தவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.
பொதுவாக 12 நோயாளிகளுக்கு யூரிக் அமிலம் அதிகரித்து இருக்கிறது. இரைப்பை குடல் தொந்தரவும் லேசான அளவில் பாதிப்பு, ஏற்பட்டுள்ளது.
இந்த ஆய்வினை நடத்திய குழுவில் இடம் பெற்றுள்ள டாக்டர் ஜாரிர் உட்வாடியா கூறியதாவது: - “இந்திய பேவிபிராவிர் மாத்திரைகள் தொடர்பான ஆய்வு முடிவுகள் ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது. தொற்று நோயின் பரவலை கருத்தில் கொண்டு, அவசர உணர்வோடு இந்த சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அறிவியல் கொள்கைகளில் சமரசம் செய்யப்படவில்லை. ஆரம்ப முடிவுகளை சுதந்திரமாக காண ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவை ஊக்கம் அளிக்கின்றன. இந்த மாத்திரைகளை எடுத்துக்கொண்டவர்கள் விரைவான நிவாரணம் பெற்றனர். வைரஸ்கள் வேகமாக ஒழித்துக்கட்டப்பட்டன. இதன் இறுதிக்கட்ட முடிவுக்காகவும், உலகளவில் நடக்கிற ஆய்வு முடிவுக்காகவும் காத்திருக்கிறேன். அதுவரையில், கொரோனா நோயாளிகளுக்கு பேவிபிராவிரை பயன்படுத்துவதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக கருதுகிறேன்” என குறிப்பிட்டார்.