tamilnadu

img

டைல்ஸில் சுடுவெயிலில் உட்கார வைக்கப்பட்ட 8 வயது தலித் சிறுவன்!

மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தில், 8 வயது தலித் சிறுவனை, சுடுவெயிலில் டைல்ஸில் ஆடையின்றி உட்கார வைத்து, சித்ரவதைக்கு உள்ளாக்கிய சம்பவம் நடந்துள்ளது.மகாராஷ்டிர மாநிலம் வார்தாவிலுள்ள ஒரு கோயில் வளாகத்திற்குள், மதங் என்ற தலித் பிரிவைச் சேர்ந்த சிறுவன் நுழைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்காக, வெறும் 8 வயதேயான அந்தசிறுவனை, அமோல் டோர் என்ற சாதிவெறி பிடித்த கொடூரன், ஆடைகளைக் களைந்து, கொதிக்கும் வெயிலில் நீண்ட நேரம் டைல்ஸ் கல்லில் அமர வைத்து சித்ரவதை செய்துள்ளான்.

வார்தாவில் தற்போது 45 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தும் நிலையில்,சூடு தாங்காமல் அந்த தலித் சிறுவன் துடியாய்த் துடித்தும், மீண்டும் மீண்டும் டைல்ஸ் கல்லில் வெற்று உடம்புடன் அமர வைத்துகொடுமைப்படுத்தியுள்ளான். இதில், சிறுவனின் பின்புறம் தீக் காயத்தை விட மோசமான அளவிற்கு வெந்து, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.முன்னதாக தங்கள் மகனுக்கு நேர்ந்ததீண்டாமைக் கொடுமை குறித்து, சிறுவனின் பெற்றோர் புகார் கொடுத்தும், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கமறுத்துள்ளனர். சிறுவனுக்கு இழைக்கப் பட்ட தீண்டாமைக் கொடுமை குறித்து, சமூக ஊடகங்களில் தகவல் வெளியான பிறகே, நடவடிக்கையில் இறங்கி, சாதிவெறி பிடித்த அமோல்டோர் மீது பல்வேறுபிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

;