மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 18 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று அதி வேகத்தில் பரவி வருகிறது.
அம்மாநில தலைநகர் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. நேற்று சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி மராட்டியத்தில் 308 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில், இன்று மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மகாராஷ்டிராவில் மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 320 ஆக உயர்ந்துள்ளது.